Pages

Thursday, 22 May 2025

நிந்தை உவமை

நிந்தை உவமை என்பது உவமையைப் பழித்து உவமிப்பது

மறுப் பயின்ற வான்மதியும் அம் மதிக்குத் தோற்கும் 
நிறத்து அலரும் நேர் ஒக்குமேனும் - சிறப்பு உடைத்துத்
தில்லைப் பெருமான் அருள் போல் திருமேனி
முல்லைப் பூங்கோதை முகம்

  • வானத்தில் இருக்கும் மதியத்தில் களங்கம் உண்டு
  • அந்த மதியத்தைப் பார்த்ததும் தாமரை சுருங்கிவிடும்
  • இவள் கூந்தலில் முல்லை அணிந்தவள் 
  • தில்லைப் பெருமான் அருள் போல் இன்பம் தரும் மேனி கொண்டவள்
  • இவள் முகம் மதியம் போன்றது என்றால், இவள் முகத்தில் மதியில் இருப்பது போல் களங்கம் இல்லையே
  • இவள் முகம் தாமரை போன்றது என்றால் இவள் முகம் இரவில் சுருங்குவதில்லையே  

மேற்கோள் வெண்பா பதிவு - சொல் பிரிப்பு

No comments:

Post a Comment