ஆசை மயக்கத்தில் கூறுவது
மோக உவமை
கயல் போலும் என்று நின் கண் பழிப்பல் கண்ணின்
செயல் போல் பிறழும் திறத்தால் - கயல் புகழ்வல்
ஆரத்தானோ மருங்குல் அம் தரள வாள் முறுவல்
ஈரத்தால் உள் வெதும்பும் யான்
- மருங்குலில் மேகலை என்னும் ஆரம் அணிந்திருப்பவளே
- அழகிய முத்துப் போன்ற உன் புன்னகை ஈரம் பட்டு நான் வெதும்புகிறேன்
- உன் கண் பிறழ்வது போல் பிறழ்வதைப் பார்த்து
- உன் கண் போல் கயல் பிறழ்கிறது
- என்று சொல்லி உன் கண்ணைப் பழிக்கிறேனே
தண்டியலங்காரம் PDF பக்கம் 73
மேற்கோள் வெண்பா பதிவு - சொல் பிரிப்பு
No comments:
Post a Comment