வெண்பா
விநாயகனே வெவ்வினையை வேரறுக்க வல்லான்
விநாயகனே வேட்கைதணி விப்பான் - விநாயகனே
விண்ணிற்கும் மண்ணிற்கும் நாதனுமாந் தன்மையினால்
கண்ணிற் பணிமின் கனிந்து. 5
- வெவ்வினையை வேரறுக்க வல்லவன்
- நம் வேட்கையைத் தணிவிப்பவன்
- விண்ணுக்கும் மண்ணுக்கும் நாதன்
கட்டளைக் கலித்துறை
கனிய நினைவொடு நாடொறும் காதற் படும் அடியார்க்
கினியன் இனியொரு இன்னாங் கிலம்எவ ரும்வணங்கும்
பனிவெண் பிறைநறுங் கொன்றைச் சடைப்பலி தேரியற்கை
முனிவன் சிறுவன் பெருவெங்கொல் யானை முகத்தவனே. 6
- அடியார்க்கு இனியன்
- அவனைப் போற்றும் எனக்கு இன்னாங்கு (துன்பம்) இல்லை
- கொன்றைச்சடை முனிவன் சிறுவன்
- அவன் கொல்யானை
வெண்பா
யானை முகத்தான் பொருவிடையான் சேய் அழகார்
மான மணிவண்ணன் மாமருகன் - மேல்நிகழும்
வெள்ளக் குமிழி மதத்து விநாயகன் என்
உள்ளக் கருத்தின் உளன். 7
- யானை முகத்தன்
- விடையான் சேய்
- மணிவண்ணன் மருகன்
கட்டளைக் கலித்துறை
உளதள வில்லதோர் காதலென் நெஞ்சில்வன் நஞ்சமுண்ட
வளரிள மாமணி கண்டன்வண் டாடுவண் கோதைபங்கத்
திளவளர் மாமதிக் கண்ணியெம் மான்மகன் கைம்முகத்துக்
களகள மாமதஞ் சேர்களி யானைக் கணபதியே. 8
கபிலதேவ நாயனார் அருளிய மூத்த நாயனார் திருஇரட்டை மணிமாலை (மூத்த நாயனார் என்பவர் விநாயகர். இதில் உள்ளவை விநாயகரைப் போற்றும் பாடல்) - 11 ஆம் திருமுறை - 10 ஆம் நூற்றாண்டு நூல்.

No comments:
Post a Comment