Pages

Sunday, 19 December 2021

திருமந்திரம் தொகுப்புப் பாடல்கள் Tirumanthiram Collections 3087

உருகிப் புறப்பட்டு உலகை வலம் வந்து 
செருகிக் கிடக்கும் துறை அறிவார் இல்லை
செருகிக் கிடக்கும் துறை அறிவாளர்க்கு
உருகிக் கிடக்கும் என் உள்ளன்பு தானே    3083
  • அவன் நாம் நீராட நமக்குள் செருகிக் கிடக்கும் துறை
எட்டினில் எட்டும் அதில் ஒட்டிரட்டியும் 
கட்டியை விட்டுக் கலந்து உண்ண மாட்டாமல்
பட்டினி விட்டும் பலவிதம் தேடியும்
எட்டும் இரண்டும் அறியாத மாக்களே    3084
  • பட்டினி விரதம் முதலானவற்றால் அவனைத் தேடிப் பயன் இல்லை
கோயிலும் அஞ்சு உள கோபுரம் மூன்று உள 
கோயில் அடைக்கக் கதவோ இரண்டு உள
கோயில் திறந்து கும்பிட வல்லார்க்கு 
கோயிலுக்கு உள்ளே குடியிருந்தானே    3085
  • அவன் உடல், உள்ளம் என்னும் 2 கோயிலுக்குள் குடியிருக்கிறான்
நாதன் இருக்கும் நடு மண்டபத்துள்ளே
நாதாங்கி இல்லாமல் நாலஞ்சு வாசல் 
ஆதாரம் ஏது என்று அறிய வல்லார்க்கு 
வேதாவின் ஓலை வீண் ஓலை ஆமே    3086
  • நடு மண்டபத்துக்குக் கதவு இல்லாமல் 4, 5 வாசல். 
அநாதி சொரூபி ஆகிய ஆன்மா
தனாதி மலத்தால் தடைப்பட்டு நின்றன
தனாதி மலமும் தடை அற நீங்கிடில்
அநாதி சிவத்துடன் ஒன்றான வாறே    3087
  • ஆன்மா மலத்தால் தடைபட்டுக் கிடக்கிறது
உரைநூல்களில் காணப்பட்ட பாடல்கள் 
திருப்பனந்தாள், காசி மடம் பதிப்பு, 2003  

No comments:

Post a Comment