Pages

Saturday, 18 December 2021

திருமந்திரம் தொகுப்புப் பாடல்கள் Tirumanthiram Collections 3082

சொன்னம் குகை மூன்று தான் பச்சிலை
மின்ன அரைத்து வை வெள்ளி பொன் ஆயிடும் 
வன்னம் பதி இந்த வாசி கொண்டு ஊதிடில் 
சொன்னம் வாஞ்சித்து ஒன்றும் என் சிந்தையே    3078 
  • தங்கக் குகையில் பச்சிலை மூன்றை (காமம், வெகுளி, மயக்கம்)  அரைத்து வை. வெள்ளி பொன்னாக மாறும்.
இருவர் இருந்திடம் எண்டிசை அண்டம் 
அரி பிரமாதிகள் ஆரும் அறிந்திலர்
பரிதியும் சோமனும் பாரும் உம்மிடத்தே
கருதி முடிந்து இடம் சொல்ல ஒண்ணாதே    3079
  • ஞாயிறு, திங்களை உனக்குள்ளே பார்
கோத்த கோவை குலையக் குருபரன்
சேத்த சேவடி சென்னியில் வைத்து ஒரு
வார்த்தை சொல்லி வழக்கு அறுத்து ஆண்டவன்
பார்த்த பார்வை பசுமரத்து ஆணியே    3080
  • குருபரன் பார்வை பசுமரத்து ஆணி போல் பதிகிறது
வேதாந்தம் சித்தாந்தம் என்னும் இரண்டும்
போதாந்தம் ஆன புரந்தரன் வாழ்வு ஒன்று 
நாதாந்தமான ஞானம் கை கூடாதேல்
சேதாந்தமான செனனம் ஒழியாதே    3081
  • அவன் அறிவு. அது கைகூடாவிட்டால் பிறப்பு ஒழியாது
ஆதாரம் ஆறு அல்ல அப்பால் நடம் அல்ல 
ஓதா ஒளி அல்ல உன் மந்திரம் அல்ல 
வேதாகமத்தில் விளங்கும் பொருள் அல்ல
சூதான நந்தி சொல் உபதேசமே    3082
  • சிவன் சொல்லே மந்திரம்
உரைநூல்களில் காணப்பட்ட பாடல்கள் 
திருப்பனந்தாள், காசி மடம் பதிப்பு, 2003  

No comments:

Post a Comment