Pages

Monday, 8 June 2026

பஞ்சபாண்டவர் வனவாசம் - PanjaPandavar Vanavasam 99


4
காளமகாரிஷிவனம்
2


அருச்சுனன்
 
மான் பிடிக்கப் போன வீமன் திரும்பி வரவில்லையே
மானை வளர்த்தவர் கண்டாரோ 
எதிர்த்தாரோ
எதுவும் தெரியவில்லையே 
மண்ணாய், கல்லாய், மரமாய் ஆக்கிவிட்டாரோ 

செத்து மடிந்தானோ
சிவலோகம் சேர்ந்தானோ
மாண்டு மடிந்தானோ 
வைகுந்தம் செர்ந்தானோ 

காணவும் போரேனோ 
கட்டழகன் தம்பியரை
பார்க்கவும் போரேனோ 
பார மத கரியை 

அருச்சுனா
பார்த்து அழைத்து வா
என்றார் 

அருச்சுனன் காடுகளில் அலைந்து திரிந்தான்

வீமனைக் காணவில்லை 
நா வறண்டது
தண்ணீர்த் தாகம் 

குயிலும்
மயிலும் 
கண்டான் 

தண்ணீர் இருக்கும் என்று சென்றான் 
வீமனைக் கண்டான்
அண்ணன் ஆயாசப்பட்டுக்கொண்டிருக்கும்போது இங்கே வீமன் உறங்குகிறானே என்று எண்ணினான் 
தண்ணீர் குடித்துவிட்டு எழுப்பிக்கொண்டு செல்லலாம் என்று நினைத்தான்

குளத்தில் இறங்கினான் 

ஆரடா தண்ணீர் குடிக்க இறங்குபவன் 
இந்தக் குளம் என்னுடையதடா
வானத்தில் குரல் 

தண்ணீர் குடிக்க விரும்பினால் இதற்கு விடை சொல் 

உலகில் 
வாடாப் பயிர் எது
வருத்தமான பாரம் எது 

ஆரடா நீ 
எதிரில் வந்து பேசு

தண்ணீரை அள்ளிக் குடித்தான் 
தள்ளாடி மயங்கி விழுந்தான்
மாயன் கண்ணசைத்தார்
எமன் அருச்சுனன் உயிரை வாங்கினான்

போன அருச்சுனன் திரும்பவில்லை என்று தருமர் நகுலனை அனுப்பினார்

நகுலனுக்கும் முன் மூவருக்கும் நிகழ்ந்தது போலவே நிகழ்ந்தது.

போன நகுலன் திரும்பவில்லை என்று தருமர் சகாதேவரை அனுப்பினார்

சகாதேவனுக்கும் முன் நால்வருக்கும் நிகழ்ந்தது போலவே நிகழ்ந்தது.

புகழேந்திப் புலவர் பாரதக் கதைகளை எளிய நடையில் வெண்கலிப்பா யாப்பில்  சில பல நூல்களை இயற்றியுள்ளார். அவற்றுள் ஒன்று பஞ்சபாண்டவர் வனவாசம் (கதை - சிற்சில பாடல் பகுதிகள்)

No comments:

Post a Comment