Pages

Sunday, 14 June 2026

பஞ்சபாண்டவர் வனவாசம் - PanjaPandavar Vanavasam 234


10
பேரண்ட வனம் 
2
ஏலகன்னி

அரகரா

இந்தச் சத்தத்தை ஏலகன்னி கேட்டாள்
ஆரடி தாதியரே
அலங்காரத் தோழிகளே 
வருவது யார் - என்றாள்

சங்கமர்

எவரோ ஒருவர் 
ஆதிசிவன் போல அழகர் 
ஒருகாலும் இப்படி ஒருவன் வந்ததில்லை 
என்று பார்த்தவர் ஓடிவந்து கூறினர் 

நடந்தாள்

ஆண்டியைக் காண நடந்தாள்
பார்த்தாள் 
உள்ளம் உருகினாள் 

காம விகாரம் 

ஐயா பெரியவரே
அறிவைப் படைத்தவரே 

தீரப் படித்தவரே
தெளிவறிந்த சங்கமரே 

புதிதாய்த் தபசு பண்ணப்
புத்தி மிகக் கற்றவரே 

வருவீர் வருவீர் என்று வழி பார்த்துக் காத்திருந்தேன் 
எப்போது வருவீர் என்று இந்த வனம் காத்திருந்தேன் 
உன்மேல் ஆசைப்பட்டிருந்தேன் 
காம விகாரத்தால் களையிழந்து நிற்கிறேன் 

என் 
மார்பைப் பார் 
தோளைப் பார் 
வண்ணம் பார் 

காணக் கிடையாது 
கருதினால் கிட்டாது 

மார்போடு மார்பு அணைத்து 
தோளோடு தோள் அணைத்து
சுகத்தைத் தா 

பொன்னும் பொருளும் உண்டு 
பொக்கிஷங்கள் மெத்த உண்டு 
தின்ன நல்  பாக்கு உண்டு 
திரவியங்கள்  மெத்த உண்டு 
மருவி விளையாடலாம் - என்றாள் 

சங்கமன்

சவகமன் அவளை ஏரெடுத்தும் பார்க்கவில்லை 

ஏலகன்னி சொல்கிறாள் 

ஏன்காணும் அருச்சனரே
ஏரெடுத்துப் பார்க்கவும் கூடாதா 
வாய் திறந்து பேசக்கூடாதா
பேசினால் முத்து உதிர்ந்துவிடுமா
வாய்முத்து உதிர்ந்தால் வாரி எடுக்கேனோ 

என்னிடம் பேசினால் என்ன குறை நேர்ந்துவிடும் 

வாரும் என்று சொல்லி ஏலகன்னி வழிமறித்தாள் 

அருச்சுனன் சிவன் நினைவிலேயே இருந்தான்

ஏழு கோடு

ஏலகன்னி அவனுக்கு முன்னே 7 கோடு கிழித்தாள் 

உன் குரு மீது ஆணை
ஐவர் மேல் ஆணை
உன் தாய்மேல் ஆணை
கோட்டைத் தாண்டி நீ செல்லக்கூடாது 
என்று சொல்லிவிட்டு மண்டபத்துக்குள் சென்றுவிட்டாள் 

எண்ணினான் 

ஆரை நினைத்தால் தப்பலாம் என்று எண்ணினான் 
அந்த வனத்துக் கன்னியை நினைத்தான் 

சூலி
கபாலி
சுந்தரி
துர்க்கையே
சண்டிப் பிடாரியம்மா 
சங்கரியே 
ஏகவல்லி 
மண்ணுப் பிடாரியம்மா
வழக்காடும் துர்க்கையரே 
ஆபத்து வேளையிலே ஆதரிக்க வேணும் அம்மா
என்று வேண்டினான் 

காளி வந்தாள் 

வாள் 
வளைதடி
அம்பு வில் 
ஆயுதம் 
ஏந்திக்கொண்டு வந்தாள் 

ஆணைக் கட்டு விடுதலை

ஏலகன்னி கோடு போட்டுத் தடுத்திருந்த ஆணைக்கட்டுகளை விடுவித்தாள் 
அஞ்சாதே என் மகனே
ஆணையிட்டேன் 
தோஷம் இல்லை என்றாள் 
விசயன் அரனை நோக்கிச் சென்றான்

ஏலகன்னி

ஒப்பனை செய்துகொண்டாள் 
அருச்சுனனுக்காகச் சமைத்தாள் 
தாதியர் பள்ளியறைக் கட்டில் மெத்தைகளைச் சோடித்தனர் 
இன்னிசை முழக்கத்துடன் சென்று அருச்சுனனை மறித்தாள் 

காளி அருளால் 

கட்டுக் கோடுகளைக் கடந்து அருச்சுனன் போய்க்கொண்டிருந்தான் 

பேரண்ட வனம் முற்றும்

புகழேந்திப் புலவர் பாரதக் கதைகளை எளிய நடையில் வெண்கலிப்பா யாப்பில்  சில பல நூல்களை இயற்றியுள்ளார். அவற்றுள் ஒன்று பஞ்சபாண்டவர் வனவாசம் (கதை - சிற்சில பாடல் பகுதிகள்)

No comments:

Post a Comment