காட்டில் பாண்டவர்க்கு ஆறாம் ஆண்டு
6
காமதேனு பர்வதம்
காமதேனு மலை
2
போர்
திரியனைச் சித்திரசேனன் தாக்கினான்படையும் படையும் தாக்கின
காமதேனு - குதிரை - போர்
காமதேனுக் காளைகள் திரியன் குதிரைகளைக் கொம்பால் குத்தினகுளம்பால் மிதித்தனகுதிரைகளை அதம் பண்ணின
சாவு
மாண்டவர்கள் மட்டுமிதம் இல்லைசெத்தவர் எண்ணிக்கை செப்ப முடியாது
சித்திர சேனன் அம்புகளைத் தோடுத்தான்
திரியன் சொன்னான்
எவனோ தெரியாது இங்கு வந்தான் சண்டை பண்ணஎதிர்த்துத் தாக்குங்கள் - என்றான்
இருதிறப் படைகளுக்கும் போர்
அளவிட முடியாத அம்பு வேகம்விதம் விதமான பாணங்கள்கோடிக்கணக்கான பாணங்கள்துரியன் விடும் பாணம் சொல்லி முடியாதுகர்னர் விடும் பாணம் கணக்கிடப் போதாதுதுரோணர் விடும் பாணம் சொல்ல முடியாதுகிருபாச்சாரி கேடான பாணம் விட்டார்
பீஷ்மாச்சாரி வேண பாணம் விட்டார்அசுவத்தாமா அநேக பாணம் விட்டார்சகுனி சரம் மேல் சரம் பொழிந்தார்வாயு அஷ்திரம்வருணன் அஷ்திரம்சந்திர அஷ்திரம்இந்திர அஷ்திரம்
கண்டான் சித்திரசேனன்
தாக்க வந்த அஷ்திரங்களை அம்பு எய்து தடுத்து வீழ்த்தினான்.மேலும் அம்புகளை எய்தான்
ஆனைகுதிரைஒட்டைமேல் இருந்த துரைகளை வீழ்த்தினான்தலைகளைத் தென்னங்குரும்பை போல் திருகினான்ஆலைக் கரும்பு போல் நசுக்கினான்நுங்கு போல் விழிகளைத் தோண்டினான்சதைகளை அறுத்துக் கழுகுக்குப் போட்டான்
ஈரல்குடல்தொப்பைசரிந்தன
பாளையங்கள்
தண்ணீர் தண்ணீர் என்று தவித்தனஅபயம் அபயம் என்று அலைந்தன
திரியோதனன் தன் தேரை இழந்து நின்றான்
அவன் உடம்பில் அனேக துளைகள்அவனைப் பிடித்துத் தேர்க்காலில் கட்டினர்தேவலோகம் கொண்டு சென்றனர்துரியாதனன் என்னென்னமோ எண்ணிப் புலம்பினான்ஆரோ தெரியாது ஆகாசம் கொண்டு போறான்எவனோ தெரியாது எமலோகம் கொண்டு போறான்ஐவரை அனர்த்தம் பண்ண வந்தேனேஎன்னை ஒருவன் இழுத்துப் போறானேஎன்ன செய்வேன்என்று ஓலமிட்டான்
உடன் வந்த அரசர்கள் எல்லாரும் என்னைக் கைவிட்டனர்ஆர் வந்து காப்பார்க்கள்எவர் வந்து காப்பார்
கூவிப் புலம்பினால் குரல் கேட்டுத் தருமர் தம்பியரை அனுப்பிக் காப்பாற்றுவார் என்று எண்ணினான்இவனிடம் தப்பிப் பிழைத்தால் பின் தருமரைக் கொன்றிடலாம்என்றெல்லாம் எண்ணினான்
புலம்பல்
அண்ணாவே அண்ணாவேஅழகான தருமலிங்கம்ஐவரைப் பார்க்க வந்தேன்எவனோ தெரியாது என்னை இழுத்துப் போகிறான்ஆவியைக் காத்தாலே அனேக கோடி புண்ணியங்கள்என்று கூச்சலிட்டான்
கூச்சலைத் தருமர் கேட்டார்
அவருக்கு மனம் கொள்ளவில்லைஅருச்சுனனை அனுப்பினார்துரியனைக் காப்பாற்றி அழைத்து என்றார்
அருச்சுனன் துரியன் செய்த கொடுமைகளை அண்ணனிடம் பட்டியலிட்டான்
துரியன் செத்தால் பழுதில்லை என்றான்
தருமர் விளக்கம்
அவரவர் செய்த வினை அவரவர் அனுபவிப்பர்நன்மை செய்தவர்க்கு நன்மை விளையும்தீமை செய்தவர் இருளில் இடர்படுவர்
வஞ்சனை வேண்டாம்
மாயன் துணை இருப்பார்என் ஆணைஇப்போதே சென்று காப்பாற்றி அழைத்து வா - என்றார்
அருச்சுனன் போர்க்கோலம்
நீட்டிடும் கால்களுக்கு நெருஞ்சிப்பூ சல்லடம்மண்டியிடும் கால்ளுக்கு மாதுளம்பூ சல்லடம்குந்தியிடும் கால்ளுக்குக் குறிஞ்சிப் பூ சல்லடம்தூக்கி வைக்கும் கால்ளுக்குத் துத்திப்பூ சல்லடம்சல்லடங்கள் இட்டுமல்லோ தட்டி வரிந்து க்கட்டிசிங்காணி வில் எடுத்துக்கொண்டுவிசயன் வந்தான்
அருச்சுனனுக்கும் சித்திரசேனனுக்கும் சண்டை
இருவருக்கும் விற்போர்யாருக்கும் யாரும் சளைக்காமல் சண்டையிட்டுக்கொண்டனர்
சித்திர சேனன் வினா
ஆரடா தம்பி நீ ஆணமை உள்ள சேவகனேஎவனடா தம்பி நீ எதிர்த்து சண்டை பண்ண வந்தாய்உன் ஊர் எதுஉன் தகப்பபன் யார்என்று சித்திரசேனன் வினவினான்
அருச்சுனன்
யுத்த களத்தில் உறவின் முறை கேட்பாரோபடுகளத்தில் ஒப்பாரி கேட்பாரோ பாருலகில்என்றான் அருச்சுனன்
என்றாலும்முதலில் நீ சொல்பின்னர் நான் சொல்கிறேன்என்றான் அருச்சுனன்
சித்திரசானன்
என் தந்தை தேவேந்திரன் - என்றான் சித்திரசேனன்
அருச்சுனன்
அண்ணாஎன்னை அறியாயோஎன் தாய் குந்தியம்மாள்என் தந்தை தேவேந்திரன் என்றான்
சித்திரசேனன்
ஒரு தந்தை பெற்ற பிள்ளை ஆனதால் என் அம்புகளுக்கு நீ பிழைத்தாய்
என்றான் சித்திரசேனன்
இருவரும் ஒருவருக்கொருவர் உறவாடிக்கொண்டனர்
- துரியன் என்ன செய்தான் - அருச்சுனன் வினா
- காட்டில் மேய்ந்த காமதேனுப் பசுக்களை கவர்ந்து சென்றான்
- பிடித்து வர என் தந்தை என்னை அனுப்பினார் - விடை
- இவன் படைகளை அழித்தேன்
- இவனைத் தந்தையிடம் அழைத்துச் செல்கிறேன் - விடை
- நாளை அழைத்துச் செல்லலாம்
- இன்று இவனைக் கட்டவிழ்த்து விடு - அருச்சுனன் கேட்டான்
சித்திரசேனன் மகிழ்ந்தான்
துரியனைக் கட்டவிழ்த்து விட்டான்
தந்தையிடம் சென்றான்நடந்ததைக் கூறினான்தேவேந்திரன் மகிழ்ந்தான்
அருச்சுனன் துரியனை தருமரிடம் அழைத்து வந்தான்
துரியன் சொல்கினான்
அண்ணாஆசையோடு உன்னைப் பார்க்கலாம் என்று காட்டுக்கு வந்தேன்வேடரைப் போல வில்லேந்தி அலைவானேன்அத்தினாபுரம் ஆளலாம்என்னொடு வாருங்கள் - என்றான் துரியன்
தருமர்
ஆறு ஆண்டு ஆயிற்றுஇன்னும் சில காலந்தானேநீ சொன்னபடி இருந்துவிட்டு வருகிறேன்சொன்னபடி சீமை தந்தால் போதும் - தருமர் கூறினார்
கனிகள்
தருமன் கூறியபடி வீமன் கனிகள் பறித்துவந்தான்துரியோதனன் உண்டான்பாண்டவரை இந்தக் காட்டிலேயே கொல்ல வேண்டும் என்று தினைத்துக்கொண்டே கனிகளை உண்டான்.
கனிகளை மூட்டையாகக் கட்டினார்
கொண்டுசென்று அத்தினாபுரத்தில் எல்லாருக்கும் கொடு - என்றார் தருமர்
காட்டைக் கடந்ததும் துரியன் பழமூட்டையை வாங்கிக்கொண்டு அருச்சுனனை அனுப்பிவிட்டான்.
நடந்தவை அனைத்தையும் துரியன் மாமன் சகுனியிடம் சொன்னான்.
சிலநாள் இதனைப் பேசிக்கொண்டிருந்தனர்
- புகழேந்திப் புலவர் பாரதக் கதைகளை எளிய நடையில் வெண்கலிப்பா யாப்பில் சில பல நூல்களை இயற்றியுள்ளார். அவற்றுள் ஒன்று பஞ்சபாண்டவர் வனவாசம் (கதை - சிற்சில பாடல் பகுதிகள்)
![]() |
| சித்திரசேனன் துரியோதரனைத் தேர்க்காலில் கட்டி இழுத்துச் செல்லல் |

No comments:
Post a Comment