Pages

Wednesday, 10 June 2026

பஞ்சபாண்டவர் வனவாசம் - PanjaPandavar Vanavasam 152


காட்டில் பாண்டவர்க்கு ஆறாம் ஆண்டு

6
காமதேனு பர்வதம் 
காமதேனு மலை
1

பாண்டவர் 

தலையில் கூடை
பன்னசாலை தங்குமிடம்
என்று வாழ்ந்தனர் 
 
துரியோதனன்

பாண்டவர் இருக்கிறாரா
பார்த்து வா
என்று துரியோதனன் தூதனை அனுப்பினான் 

காமதேனு மலையில் கண்டோம்
திரும்பிய தூதர் கூறினர் 

படையுடன் சண்டைக்குப் போகலாமா
துரியோதனன் மாமன் சகுனியைக் கேட்டான் 

பாண்டவர் போர்கலையை மறந்து ஆற்றல் குன்றியிருப்பர் 
செல்லலாம்
என்றான் சகுனி 

படை

அரசர்கள்
அமைச்சர்கள்
ஐந்து குருக்கள் 
ஆயிரம் சேவகர்
பலப்பல ராணுவம் 
நடப்பாளர் 
எல்லாரும் புறப்படுங்கள்
என்றான் 

சண்டை நகார் அடிக்கப்பட்டது
ஆனை
முதிரைப் படைகள் புறப்பட்டனர் 
கூடாரம் அடித்துக்கொண்டு சென்றர் 

கலிங்கர், தெலுங்கர், கன்னடியர் முதலானோர் படையும் சென்றது
காந்தாரி பிள்ளைகள் கௌரவர் படையும் சென்றது

துரோணரை வழிநிமித்தம் பாரும் என்றான் துரியோதனன்

  1. சாரை குறுக்காச்சு 
  2. பூனை இடப்பக்கம் சென்றது
  3. கழுகு வலப்பக்கம் சென்றது 
  4. நரையான் (வெள்ளைக்காளை) இடப்பக்கம் சென்றது
  5. நரி, பாம்பு - குறுக்காச்சு
  6. பார்ப்பான், வேடன் எதிரே வந்தனர்
  7. வெட்டியான் "பிடி" என்றான் 
  8. கோட்டான் குழறிற்று
  9. ஆந்தை அலறிற்று
  10. கிழவி நெருப்பு எடுத்துக்கொண்டு குறுக்கே வந்தாள்

அறிவுரை

பொல்லாச் சகுணங்கள் தோன்றின
இன்று ஒருநாள் விட்டு நாளை செல் - என்றார்

துரியோதனன்

இந்தச் சகுனங்கள் பாண்டர்க்கே  
எனக்கு அன்று - என்று சொல்லிக்கொண்டு சென்றான்

படை வரவு 

ரண பேரி முழக்கத்துடன் படை சென்றது
ஒவ்வொரு நாளும் ஒரு வனத்தில் தங்கினர்
ஆறாம் நாள் காமதேனு பருவதம் வந்தனர் 

மாயன்

மாயன் உணர்ந்தார்
பாண்டவரைக் காக்க எண்ணினார் 
படையினருக்குத் தாகம் உண்டாக்கினார் 
தேவேந்திரன் பசு காமதேனு
காமதேனு நீர் உண்ணும் குளம் ஒன்று மட்டும் அங்கு இருந்தது 

துரியோதனன்

தண்ணீர் தேடி வாருங்கள் என்றான்
தேடினர் 
கண்டனர் 
தெரிவித்தனர் 

காமதேனு மேய்க்கும் இடையர்

தம் மாடுகளை ஓட்டிக்கொண்டு வந்து குளிக்க விட்டனர் 
மாடுகள் குளத்தில் இறங்கின 
நீரைக் கலக்கின 
நீர் சேற்றுநீர் ஆயிற்று 

துரியோதனன் ஆணை

ஆயிரம் இடையர்களையும் வெட்டுங்கள்
மாடுகளை அத்தினாபுரம் ஓட்டுங்கள் - என்றான்
வெட்டினர்

தேவேந்திரனிடம் முறையீடு

தப்பியவர் தேவேந்திரனிடம் சென்று முறையிட்டனர் 
தேவேந்திரன் கண்களை உருட்டினான் 
உருமினான்
அவன் மீசை துடித்தது 

சித்திராங்கதன் (சித்திரசேனன்) 

தேவேந்திரன் மகன் சித்திராங்கதன்
அவனை இந்திரன் போருக்கு அனுப்பினான்

படையுடன் செல் 

மாட்டை மடக்கிக்கொண்டு வா
போராளியை என் முன் கொண்டு வா
இல்லாவிட்டால் என் முன் வராதே - என்றான்

மாதலி 

இவன் சித்திராங்கதனின் தேரோட்டி
இவனைத் தேரை ஓட்டிக்கொண்டு வா - என்றான்
அவன் தேரை அலங்கரித்தான் 
குதிரைகளைப் பூட்டினான் 
ஓட்டிக்கொண்டு வந்தான்

சித்திரசேனன் போருக்கு வந்தான்

படையுடன் வந்தான்

புகழேந்திப் புலவர் பாரதக் கதைகளை எளிய நடையில் வெண்கலிப்பா யாப்பில்  சில பல நூல்களை இயற்றியுள்ளார். அவற்றுள் ஒன்று பஞ்சபாண்டவர் வனவாசம் (கதை - சிற்சில பாடல் பகுதிகள்)

No comments:

Post a Comment