முன்கதை
5
சயிந்தவ மகாரிஷி வனம்
1
மாம்பழம்
பாண்டவர் காட்டில் வாழும் ஐந்தாம் ஆண்டுகூடை தலைமேல் வைத்துக்கொண்டு திரியும் வாழ்க்கைபன்னசாலை அடுக்கு வீடுகள்துரோபதி அந்த வனத்தில் உலாவி வந்தாள்மிகப் பெரிய மாமரம்அதில் சூரியகாந்தி மலர் போல் ஒரே ஒரு பழம்அதனைத் தின்ன ஆசைப்பட்டாள்பறித்துத் தா வீமனிடம் சொன்னால் பறித்துத் தின்றுவிடுவார்நகுலன், சகாதேவனிடம் சொன்னால் என்னால் முடியாது என்று சொல்லிவிடுவார்கள்என்று எண்ணினாள்
அருச்சுனனை
பறித்துத் தருமாறு அருச்சுனனைக் கேட்டாள்.கொஞ்சிக் கேட்டாள்தனியே அழைத்துச் சென்று கேட்டாள்காணாது கண்டேனையாகண்டாசைப் பட்டேன் ஐயாபாராது பார்த்தேனையாபார்த்து ஆசைப்பட்டேன் ஐயாதங்கத்தைக் காய்ச்சித் தரையில் கவிழ்த்து போல்பொன்னை உருக்கியல்லோ பூமியிலே விட்டது போல்சூரியனைப் போல் அழகாய்த் தோணுது மாங்கனிதான்சந்திரனைப் போல் அழகாய் தான் இருக்கும் மாங்கனிதான்அந்தக் கனி தின்ன ஆசைபறித்துத் தாரும்பறித்துத் தராவிட்டால் எதுவும் தின்னமாட்டேன்தண்ணீரும் குடிக்கமாட்டேன்என்றாள்
அருச்சுனன் பறித்துத் தர ஒப்புக்கொண்டான்
வந்தான்பார்த்தான்வானத்தில் ஆயிரம் யோசனை தூர உயரத்தில் பழம் இருந்ததுவில்லை வளைத்தான்மந்திரம் சொன்னான்எய்தான்பழம் மண்ணில் விழுந்ததுஅப்போது வானமே அதிர்ந்தது.
தூக்க முடியவில்லை
பழத்தை அவனால் தூக்க முடியவில்லைவீமனை அழை என்றான்தருமருக்குத் தெரியாமல் வீமனை அழைத்து வந்தாள்இருவராலும் பழத்தைத் தூக்க முடியவில்லைநகுல சகாதேவரை அழையும் என்றனர்நால்வர் சேர்ந்தும் தூக்க முடியவில்லைஐந்து பேரும் திகில் அடைந்தனர்
தருமரை அழைத்து வந்தாள்
தருமர் சொல்கிறார்
ஆர் உண்ணும் கனியோதேவர்அரசர்முனிவர்ஆர் உண்ணும் கனியோஎன்று எண்ணித் தருமர் மனம் கலங்கினார்
மாயனை நினைத்தார்
மாயன் வந்தார்வணங்கினர்மாங்கனி பற்றிக் கூறினர்என்னால் எதுவும் செய்ய இயலாது என்றார் மாயவன்
தருமர் புலம்பல்
ஆகாத தம்பியர் அசடருடன் பிறந்தேன்பொல்லாத் துஷ்டருடன் பிறந்த ஒரு தன்மையினால்என்அங்கம் குலையுதே ஆண்டவரே என்ன செய்வேன்என்னை அறியாமல் இக்கனியைத் தான் அறுத்தார்அறிந்தனேயாமாகில் அறுக்கவொட்டேன் மாங்கனியைபார்த்தேனேயாமாகில் பறிக்கவொட்டேன் மாங்கனியைஅடியார்கள் செய்த பிழை ஆண்டவரே மனம் பொறுத்துதெரியாதார் செய்த பிழை தேவர் மனம் பொறுத்துஉன்உள்ளங்கை நெல்லிப்பழம் உருக் குழைந்து போகாமல்காக்கக் கடன் உமக்கு
மாயன் விடை
என்னை வருத்தாதேஎன்மேல் சலியாதேஎன்றார்
தருமர் வேண்டுதல்
இந்தக் கனி எப்படியாவது மரத்தில் இருந்த இடத்தில் பொருந்துக்கொள்ள வேண்டும்.இதற்கு வழி செய்யுங்கள்என்றார்
புகழேந்திப் புலவர் பாரதக் கதைகளை எளிய நடையில் வெண்கலிப்பா யாப்பில் சில பல நூல்களை இயற்றியுள்ளார். அவற்றுள் ஒன்று பஞ்சபாண்டவர் வனவாசம் (கதை - சிற்சில பாடல் பகுதிகள்)
![]() |
| வீழ்த்திய மாம்பழத்தை எடுக்க முடியவில்லை |

No comments:
Post a Comment