4
காளமகாரிஷிவனம்
5
ஒட்டன் ஒட்டச்சி
தருமன் மனத்தைத் தெரிந்துகொள்ள மாயன் ஒட்டனாகவும், எமன் ஒட்டச்சியாகவும் வந்து பிணத்தை இழுத்தல்
இந்தக் குளத்து விஷ நீரைக் குடித்து யார் மாண்டாலும் அவரை எடுத்துக்கொண்டு போய்ப் புதைப்பது அரசன் எங்களுக்கு இட்டிருக்கும் கட்டளை என்று சொல்லிக்கொண்டு வீமன் அருச்சுனன் பிணங்களை ஒட்டனும் ஒட்டச்சியும் இழுத்தனர்.
பிணத்தை வாங்கினது
இவர்கள் என் தம்பியர்நான் இருக்கும்போது என் தம்பியை இழுக்காதீர்கோடி சரணம் - என்றார்வீமனைத் தருமர் வாங்கிவந்தார்அருச்சுனனைப் பாஞ்சாலி வாங்கிவந்தாள்நீங்களே எடுத்துப் புதையுங்கள் என்று சொல்லிவிட்டு இருவரும் நடந்தனர்
தருமர் மாயவனை வேண்டினார்.
அடியளந்த மாயவரே ஆதிமூலம் வாரும்எல்லை அளந்த சாமி எம்பெருமாள் மேகவண்ணாகல்லான அகலிகையை நல்ல பெண் ஆக்கி வைத்தாய்மூலம் என்னும் குஞ்சரத்தைக் காத்த முகில்வண்ணாஆலிலைமேல் பள்ளிகொண்ட அரிராமா வாருமையாமச்ச வடிவு அச்சுதரே இச்சகத்தில்கூர்ம வடிவு கொண்டு பாதாளம் போய் வந்தீர்இரணியனைப் பங்கம் செய்தீர்ராமர் வடிவு கொண்டு ராவணனைச் சங்கரித்தீர்அரக்கு மாளிகையில் ஐவரையும் காத்தீர்அம்பலத்தில் துரோபதைக்கு அட்சயத் துகில் கொடுத்தீர்உன் மகிமை யார் அறிவார்நீரே துணை அல்லால் வேறு துணை இல்லை
கூடப் புலம்புகிறாள் கொம்பனையாள் துரோபதையும்
மாயனும்எமனும்வந்தனர்மாயப்பொய்கை - செய்திகளை விளக்கினர்.மாண்டார் பிழைத்தால் வையகம் கொள்ளுமோதம்பியரைத் தகனம் செய் - என்றனர்
தருமர் புலம்பல்
பச்சைப் புழு எடுத்துப் பெருநெருப்பில் போட்டடால் போல்புலம்பினார்உன்னை நம்பி உயிர் கொண்டு உலாவுகிறேன்நம்பி இருந்த என்னை நட்டாற்றில் விட்டுவிட்டாய்என்னையும் கொன்று தகனம் செய் - என்றார்
துரோபதி
மாங்கலியப் பிச்சைமடிப்பிச்சை கேட்டாள்
மாயன்
மருத்துவர் போல்கையில் மருந்துப் பைதோளில் சோளிகையில் செபமாலைகமண்டலம்- கோலம் எடுத்துக்கொண்டு வந்தார்
சிவசிவா என்று சொல்லிக்கொண்டு வந்தார்
இறந்தவர் நால்வரில் யார் வேண்டும் - என்றார்
என் தாயார் குந்தி வயிற்றில் பிறந்தவன் நான் ஒருவன் இருக்கின்றேன்
என் மறுதாய் வயிற்றில் பிறந்த நகுலனை எழுப்பும் - என்றார்
பிடித்து வைத்திருக்கும் நால்வரு உயிரையும் விட்டுவிடு என்று மாயவன் எமனிடம் கூறினார்
எமன் பிடித்து வைத்திருந்த உயிரைத் திரும்பக் கொடுத்தான்
- பூத்திடம் காப்பாற்றத் தான் செய்தது பற்றி விளக்கினார்.
"என்ன வினை வந்தாலும் எம்மை நினையும்"
என்று சொல்லிவிட்டு மாயன் சென்னறார்.
- புகழேந்திப் புலவர் பாரதக் கதைகளை எளிய நடையில் வெண்கலிப்பா யாப்பில் சில பல நூல்களை இயற்றியுள்ளார். அவற்றுள் ஒன்று பஞ்சபாண்டவர் வனவாசம் (கதை - சிற்சில பாடல் பகுதிகள்)
No comments:
Post a Comment