4
காளமகாரிஷிவனம்
4
தம்பியர் நால்வரையும் தேடிக்கொண்டு தருமர் துரோபதையுடன் வந்தார்.
தேடிஅலைகையில் தாகம் எடுத்தது
வழியில் மாயன் மயில் ஆடிற்று
எமன் குயில் கூவிற்று
மயிலும் குயிலும் குளிர்ந்த இடத்தில் வாழும் என்பர்
அங்கே தண்ணீர் இருக்கும்
போகலாம் என்று இருவரும் சென்றனர்.
அங்கே தம்பியர் உறங்குவதைக் கண்டனர்
தண்ணீர் குடித்த பின் எழுப்பிக்கொண்டு செல்லலாம் என்று எண்ணினர்
குளத்தில் இறங்கினர்
மாயனின் வான்குரல்
ஆரடா தம்பி என் குளத்தில் இறங்கியவன்தாகம். தண்ணீர் குடிக்க ஒப்புதல் தாருமையாஒப்புதல் தந்தால் தண்ணீர் குடிக்கிறேன்நான் கேட்பதற்குச் சரியான விடை சொன்னால் தண்ணீர் குடிக்க ஒப்புதல் தருகிறேன்.
உலகில் எது அதிசயம்
- மனிதன் பிறப்பதும் இறப்பதும்
வருத்தமான பாரம் எது
- தாய் பிள்ளையை வயிற்றில் சுமப்பது
வாடாப் பயிர் எது
- அறுகம்புல்
எல்லாம் சரி
தண்ணீர் குடித்துக்கொள்
இருவரும் தண்ணீர் குடித்தனர்
தருமர் தம்பியரிடம் வந்தார்
சகாதேவன் தலைமாட்டில் எழுதி வைத்திருந்தான்
"விஷ நீரை அருந்தி மாண்டுவிட்டோம்நீங்கள் வந்தால் இந்த நீரைக் குடிக்காரீர்தப்பிப் பிழையுங்கள்"
தருமர் புலம்பல்
மலையே பருவதமே மாண்டு மடிந்தீரோசெம்மலையே பருவதமே செத்து மடிந்தீரோநீல மலையே நிலத்தோடு சாய்ந்தீரோகல்லான தூணுக்குக் கலக்கம் இல்லை என்று இருந்தேன்கல்லான தூணைக் கறையான் அரித்ததுவோஇரும்பான தூணுக்கு என்ன குறை என்றிருந்தேன்அரும்பான தூணுமே இற்று விழுந்ததுவோவச்சிரத் தூணுக்கு மயக்கம் இல்லை என்றிருந்தேன்வச்சிரத் தூணலவோ மண்ணோடு உளுத்ததுவேசெம்பருந்து வந்து என்னைச் சிறகால் அடித்ததுவேகுஞ்சைப் பறி கொடுத்த கோழி போல் ஆனேனேகை ஒடிந்த யானை போல் கலங்கினேன் தம்பியரேஓடுகிற தானுக்கு ஒருகால் ஒடிந்தாற் போல்உள்ளம் குலைந்து உருகுகிறேன் தம்பியரேஎன்னைத் தவிக்க விட்டு எங்கே மறைந்தீர்கள்ஐயையோ தெய்வமே அலையவிட்டுப் பார்ப்பது ஏன்வீமனைப் பார்த்துப் புலம்புவதுவெற்றி மதயானை வீமா மதகரியேகட்டிக் கரும்பே என் கண்மணியே எங்கு ஒளிந்தாய்நூலார் கடுந்திரளார் நூற்று ஒரு மன்னரையும்கொல்லுகிறேன் என்று நீ கொடிய சபதம் இட்டாய்அவ்வார்த்தை தான் மறந்து அப்பா நீ எங்கு ஒளிந்தாய்வச்சிர மிடியே நீ மண்ணோடு சாய்ந்தாயோதங்க முடியே நீ தரையில் கவிழ்ந்தாயோஎன்னை அலைய விட்டு எங்கே நீ போய் ஒளிந்தாய்
(என்று புலம்பி மூர்ச்சையானார்)
(துரோபதை காட்டுத் தழையால் விசிறினாள்)
(மூர்ச்சை தெளிந்து எழுந்து)
அருச்சுனனைப் பார்த்துப் புலம்புகிறார்
ஆணாள் அழகு மன்னா அருச்சுனா என்பிறப்பேஎன்னைத் தனியே விட்டு எங்கே நீ போய் ஒளிந்தாய்மீசை முறுக்கழகா விழியிற் கருப்பழகாநாவிலே நக்ஷத்திரம் நயன விழிப் பார்வைபல்லிலே பரச வீணை பாதத்தில் தாமரைப்பூமுதுகிலே மச்சம் முழங்காலில் முத்துமணிஇடது கால் விருது பொம்மைவலதுகால் வீர தண்டைதலவிருதுகுலவிருதுசத்திராதி பேர்விருதுஎதிர்த்தவன்-தன் விருதுஎதிராளி முகவிருதுஇத்தனை விருதுகளைஎடுத்து நீ பூட்டிக்கொண்டுகட்டி எதிர்த்தாலேகலங்குமே சேனை எல்லாம்அழகை எழுதியவர்ஆயுளை எழுதலையேபெற்றாள் வயிற்றில்பெருநெருப்பை இட்டாயே
நகுலனைப் பார்த்து
அப்பா நகுலா என் அறிவுள்ள கண்மணியேமலையே பர்வதமே வாழ்வுமலைக் குஞ்சரமேமாண்டு மடிவாய் என்றுமனத்தில் நினைத்ததில்லைசெத்துவிடுவீர் என்றுசற்றும் அறியேனேஆரைச் சதம் என்பேன்அன்னியரைச் தஞ்சம் என்பேன்எவரைச் சதம் என்றேன்இனி யாரைத் தஞ்சம் என்பேன்பார்த்த முகங்களெல்லாம்வேற்றுமுகம் காணுதையாகண்ட முங்ஙகள் எல்லாம்கடுத்த முகம் ஆகுதப்பாகூடப் பிறந்தீரேகூட்டுப்பால் உண்டீரேஒக்கப் பிறந்தீரேஒரு முலைப்பால் உண்டீரேகாட்டுக்குள் கையை விட்டுக்கயிலாயம் போனீரோதங்கத் தரிக்கவில்லைதரையில் கால் பாவவில்லைநிற்கத் தரிக்கவில்லைநிலத்தில் கால் பாவவில்லைகூட மடிவேன் காண்கொற்றவரே உங்களுடன்
சகாதேவனைப் பார்த்து
சாத்திரக் கொடி வேந்தாசகாதேவ ராசாவேமுன்வரும் காரியத்தைமுதலிலே சொல்வாயேஇனி நடக்கும் காரியத்தைஎந்தனுக்குச் சொல்வாயேஅப்படிக்கொத்ததொருஅறிவுள்ள கண்மணியே
தோறா வடிவழகி
துரோபதை
தன் கணவர்களைப் பார்த்துப்
புலம்பல்
மாலையிட்ட மன்னவர்கள்மாண்டுவிட நீதியுண்டோதாலி கட்டிய ராசாக்கள்தரையில் விழலாச்சேமங்கலியம் உண்டுமனம் உண்டு என்றிருந்தேன்உலகத்துப் பெண்டுகள்ஒருவனுக்குக் கை கொடுப்பார்ஐவருக்குக் கை கொடுத்துஅம்பலத்துக்கு ஆளானேன்ஆரைக் கழுத்திஅரைக் கழுத்தி ஆனேனேகோரைக் கழுத்திகுரைக்கழுத்தி ஆனேனேதங்கக் கழுத்திதலை விரிக்க நாளாச்சேமல்லிகைச் சாலையிலேமயிர் விரிக்க நாளாச்சேகுங்குமச் சாலையிலேகுழல் விரிக்க நாளாச்சேஐயையோ தெய்வமேஅநியாயம் செய்தீரேதோள் சேர்ந்த ராசாக்கள்சோர்ந்துவிடக் காரியமேன்மார் சேர்ந்த ராசாக்கள்மடிந்துவிடக் காரியம் ஏன்மஞ்சள் இழந்தும்மணம் இழந்தும் பூ இழந்தும்தாலிச் சரடு இழந்துதரையிலே நிற்பேனோதருமர் சொல்கிறார்நாமும் இந்த நீரைக் குடித்தோமேசாகாமல் இருக்கிறோமேநாமும் மடிந்தால் நல்லது
இப்படிப் புலம்பிக்கொண்டிருந்தனர்
புகழேந்திப் புலவர் பாரதக் கதைகளை எளிய நடையில் வெண்கலிப்பா யாப்பில் சில பல நூல்களை இயற்றியுள்ளார். அவற்றுள் ஒன்று பஞ்சபாண்டவர் வனவாசம் (கதை - சிற்சில பாடல் பகுதிகள்)
![]() |
| பாண்டவரைக் கொல்ல, காளமகா ரிஷியால் அனுப்பப்பட்ட வேதாளம், பாண்டவர் இறந்து கிடந்ததால், தன்னை அனுப்பிய முனிவரையே கொன்றது. |

No comments:
Post a Comment