பக்கம் 21
புலந்திரனுக்குத் தாயார் புத்தி சொல்வது
ஆகாய வான்புரவி அலை தாரா நீ ஏறி
ஒரு சாமப் பொழுதினிலே உத்தமரே நீ போய்
மந்திர வாள் தாரேன் மன்னர் பெருமாளே
வாள் வைத்தால் கதவு திறக்கும் காண் மன்னவனே
தானே திறக்கும் காண் தனஞ்செயனே பொற்கதவு
போனார் போல் நீயும் பொற்கொடியை எழுப்பாதே
ஆராய்ந்து பார்த்து ஆணழகா மன்னவனே
கையாலே தட்டிக் காரிகையை எழுப்பாமல்
காலாலே தட்டி மங்கையரை நீ எழுப்பும்
சற்றேதான் தட்டலுமே தையல் எழுந்திருப்பாள்
அவள் வாழும் பெருமைகளும் மாமன்மார் சேவகமும்
உத்தமர்கள் பஞ்சவரை ஓட்டி அரசாள்வதுவும்
கட்டழகர் பஞ்சவரைக் காடோட்டி ஆளுவதும்
கர்னனிட அதிகாரம் காவல் போர் வீரியமும்
ஏசாதும் ஏசி எடுத்துரைப்பாள் ஆமாகில்
உத்தரங்கள் சொல்லாதே ஒக்க நின்று பேசாதே
கொற்றவனே உன்றனுக்குக் கோபம் வராமல்
அத்தனைக்கும் உட்கொடுத்து அலை தாரா நீ கேட்டு
எத்தனை சொன்னாலும் எனக்காக நீ பொறுத்து
அன்னமே இக் கோயில் ஆர் கோயில் சொல்லும் என்று
ஆரணங்கே உன்னுடைய ஆச்சி பேர் சொல்லும் என்று
மங்கையரே உம்முடைய மாமன் பேர் சொல்லும் என்று
அன்னமே உம்முடைய ஐயன் பேர் சொல்லும் என்று
மங்கை நல்லார் தன் பேரும் மணவாளன் தன் பேரும்
ஆரமுடையாள் அடையாளம் சொல்லும் என்று
நிரூப அடையாளம் நேரிழைக்குத் தான் கொடுக்க
தாரேன் அடையாளம் தையலர்க்கு நீ கொடுத்து
அடையாளம்
அல்லிக் கொடியும் அழுத்திய சீராவும்
சீராரும் கச்சும் திருமுடியும் தான் கொடுத்தாள்
உன்
மாமிமார் இட்டதொரு பவுத்திரம் தான் கொடுத்தாள்
வாங்கி முடிந்துகொண்டார் மன்னர் பெருமானும்
மாதா அடையாளம் வைத்தான் மடிதனிலே
அரசாளும் நாயகியாள் அல்லியரும் கூறுகிறாள்
அரும்பாவி வாசலிலே அமிர்தம் புசியாதே
கஸ்தூரி பூசாதே கபடனது வாசலிலே
தண்ணீர் குடியாதே தையலது வாசலிலே
கொப்பளித்து நீரைக் குடியாதே வாரும் என்றாள்
இருந்து ஒரு சாமம் ஏந்திழையை நீ கூடி
வர ஒரு சாமத்திலே வந்துவிடும் என்றாளே
அருள் அருளும் என்றாரே அப்படியே ஆகுது என்றார்
போக விடை தாரும் என்று புலந்திரனும் தெண்டனிட்டு
வந்து பணிந்ததொரு மகனாரை வாழ்த்தல் உற்றாள்
நீரே அரசாள்வீர் நீடூழி காலமெல்லாம்
என்னைப் பெறுவீர் எதிர்த்தார் முடி பெறுவீர்
பிள்ளை பெறுவீர் பெருமாளைப் போல் வாழ்வீர்
வாழ்ந்திடுவீர் என்று மனம் குளிர வாழ்த்தினாள்
தேனல்லோதாரனுக்கு திருநீறு தான் கொடுத்தாள்
வாய்த்த இலைச்சுருளும் வர்னப் பழக்காயும்
காவலன் வீரியற்கு கை நிறைய அள்ளி இட்டாள்
ஆங்கிலேயர் வருகைக்குப் பின்னர்,
18 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த புகழேந்திப் புலவர்
எளிய நடையில்
வெண்கலிப்பா யாப்பில் இயற்றிய நூல்
No comments:
Post a Comment