வரிசை எண்ணில் பாடல் தொடுப்பு உள்ளது
- செங்குட்டுவன் இங்கு நிலம் தரு திருவின் நெடியோன் குறிப்பிடப்படுகிறான்
- மகளிர் விளக்கேற்றி "மன்னன் வாழ்க" என வாழ்த்தும் நேரத்தில் இவன் வஞ்சி நகருக்குள் நுழைந்தான்
- படை வீரர்களும் ஊர் திரும்பினர்
- அவர்களின் விழுப்புண்களுக்கு மகளிர் மார்பகம் வேது கொடுத்தது
- மகளிரின் முறுவல், முலை, மேனி வீரர்களுக்கு விருந்தாயிற்று
- விருந்தளித்த தன் மேனியை மகளிர் கண்ணாடியில் பார்த்துக் கொண்டனர்
- யாழில் இசை பாடி மகிழ்வித்தனர்
- காம-தேவன் ஆண்டுகொண்டிருந்தான்
- அரசி வேண்மாள் வானில் நிலாவைக் கண்டு களிக்க வெளியில் வந்தாள்
- விளக்கேந்திய மகளிர்
- கருவிகளில் பண்ணிசை பாடிய மகளிர்
- சாந்து, மணப்பொடி, புகை ஏந்திய மகளிர்
- கண்ணாடி, மாற்றாடை, அணிகலன் ஏந்திய மகளிர்
- அரசியுடன் வந்தனர்
- அரசனும் அரசியும் மணியரங்கில் அமர்ந்திருந்தனர்
- சாக்கையன் சிவன் ஆடும் கொட்டிச்சேதம் (கொடுகொட்டி) ஆட்டம் இசை முழக்குடன் ஆடினான்
- இந்தக் கூத்தை இருவரும் இரவில் கண்டு களித்தனர்
- காலை
- அரசன் அரசவையில் இருந்தான்
- நீலன் கஞ்சுகர் தலைவன்
- கஞ்சுகர் கனக விசயருக்குப் பாதுகாப்பாகச் சேரன் அனுப்பிய காவலர்கள்.
- நீலன், மாடலன் இருவரும் அவைக்கு வந்தனர்
- சோழனும் பாண்டியனும் கூறியதைத் தெரிவித்தனர்
- கனக விசயரைக் காட்டியபோது, சோழன் சொன்னான்
- அவந்தி, மகத நாட்டவர் கட்டித் தந்த சித்திர மண்டபத்தில் இருந்துகொண்டு சொன்னான்
- போரில் எதிர்த்து நிற்க முடியாமல் தப்பி ஓடியவரைப் பிடித்து வந்தது வீரம் அன்று - என்றான்
- பாண்டியன் சொன்னான்
- அவனது குடைக்காம்பு ஆரிய மன்னர் போர்களத்தில் விட்டுச் சென்ற குடையின் காம்பாம்
- அவன் கையில் இருக்கும் கோல், இந்திரன் மகன் சயந்தன் பாண்டியனுக்குப் பயந்து மூங்கிலாக மாறி ஒளிந்திருந்தபோது வெட்டிய மூங்கிலாம்
- சேரன் தன்னிடம் தோற்றவரைக் காட்டுவது புதுமையாக இருக்கிறது - என்றான்
- கேட்ட சேரன், சோழனும் பாண்டியனும் தன்னை இகழ்ந்ததாக எண்ணி வெகுண்டான்
- அரசே
- சினம் வேண்டாம்
- என்று மாடலன் வேண்டினான்
- அரசனாக 50 ஆண்டுகள் இருந்துவிட்டீர்கள்
- இன்னும் அறக்கள வேள்வி செய்யாமல் மறக்ககள வேள்வி செய்ய நினைக்கிறீர்கள் - என்றான்
- போரில் கண்ட வெற்றிகள் ஒருவனுக்கு நிலையானவை அன்று
- உனக்கு நரை வந்துவிட்டது
- நான் சொல்வதைக் கேள்
- உன் உயிர் அடுத்த பிறவியில் யாதாய் இருக்கும் எனக் கூறுவதற்கு இல்லை.
- உடம்பில் புகுந்த உயிர் வெற்றுடம்போடு அழியக்கூடாது
- உடம்பின் நற்செயல்களை அடுத்த பிறவிக்கு எடுத்துச் செல்ல வேண்டும்
- அதற்கு நீயும் உன் மனைவியும் சேர்ந்து வேள்வி செய்ய வேண்டும்
- என்றான்
- மன்னன் ஒப்புக்கொண்டான்
- பார்ப்பனரைக் கொண்டு வேள்வி சாந்தி செய்ய ஏவினான்
- கனக விசயரை விடுவித்தான்
- அவர்களை வேளாவிக்கோ மாளிகையில் தங்க வைத்தான்
- வேள்வி முடிந்த பின் நகருக்குள் செல்லலாம் என்று வில்லவன் கோதையிடம் தெரிவித்தான்
- சிறையிலிருக்கும் அனைவரையும் விடுதலை செய்தான்
- ஆட்சிப் பொறுப்பினைப் படைத்தலைவன் அழும்பில்வேளிடமும் ஆயத்தாரிடமும் ஒப்படைத்தான்
- தன் மைத்துனன் சோழன் கிள்ளிவளவன் தன் நாட்டை ஆளுமாறு செய்தான்
- கண்ணகிக்குக் கடவுள் மங்கலம் செய்தான்
- கண்ணகியின் வஞ்சினத்தைப் பாராட்டினான்
- வேங்கை மரத்தடியில் கடவுள் மங்கலம் செய்யப்பட்டது
- வித்தகர் கண்ணகியைத் தெய்வப் படிமம் ஆக்கினர்
- பூசை, விழா நடைபெற நிலங்கள் அளித்தான்
No comments:
Post a Comment