Pages

Thursday, 30 April 2026

செங்குட்டுவன் வெற்றியுடன் திரும்பினான் - நீர்ப்படை

எண் தொடுப்பில் பாடல் உள்ளது

  • செங்குட்டுவன் இமயத்தில் கல் எடுத்தான்
  • கனக விசயர் தலையில் ஏற்றிக் கொண்டுவந்தான்
  • கங்கையில் நீராட்டினான்
  • தேவர்க்கும் அசுரர்க்கும் போர் நடந்த காலம் 18 ஆண்டு
  • இராமனுக்கும் இராவணனுக்கும் போர் நடந்த காலம் 18 மாதம்
  • பாரதப் போர் நடந்த காலம் 18 நாள்
  • இந்தப் போர் நடந்த காலம் 18 நாழிகை 
  • ஆரிய மன்னர்கள் செங்குட்டுவன் கங்கை ஆற்றின் தென்கரையில் தங்கப் பல வகையான பாடி வீடுகள் (கூடாரங்கள்) கட்டித் தந்தனர்
  • அன்று செங்குட்டுவனுக்குப் பிறந்த நாள்
  • வெற்றி தேடித் தந்தவர்களுக்குப் பொன்னணிகள் வழங்கினான்
  • அப்போது மாடல மறையோன் அங்கு வந்தான்
  • மன்னனை வாழ்த்தினான்
  • கானல் பாணி கனக விசயர்தம் முடித்தலை நெறித்தது - என்றான்
  • இப்படிச் சொன்னால் இங்குள்ளவர்களுக்குப் புரியாது
  • விளக்கமாகச் சொல் என்றான் சேரன் 
  • மாதவி பாடிய கானல் வரிப் பாடலால் கனக விசயர் கல்லைச் சுமந்தது பற்றி விளக்கமாகச் சொன்னான்
  • மாடலன் மேலும் சொல்கிறான்
  • கோவலன் இறந்த செய்தி கேட்டு - அடைக்கலப் பொருளைக் காப்பாற்ற முடியாமல் போனதற்காக - மாதரி தன் உயிரை மாய்த்துக்கொண்டாள்
  • கவுந்தியடிகள் உண்ணா நோன்பு இருந்து உயிர் துறந்தார்
  • உயிர் துறந்த பாண்டியனுக்குப் பின்னர் பொற்றேர்ச் செழியன் அரசன் ஆனான்
  • புகார் நகரில் நான் சொல்லக் கேட்டு, கோவலன் தந்தை தன் செல்வத்தை எல்லாம் தானமாக வழங்கிட்டு சமணப் பள்ளியில் நோன்பு இருக்கிறான் 
  • கோவலன் தாய் துயரம் தாங்க முடியாமல் இறந்து போனாள்
  • கண்ணகி தந்தை செல்வத்தைத் தானம் செய்துவிட்டு, சமணத் துறவி ஆனான்
  • கண்ணகி தாய் உயிர் துறந்தாள்
  • செய்தி அறிந்த மாதவி தன் மகள் மணிமேகலையை, மொட்டை அடித்து, புத்த மடத்தில் சேர்த்து, துறவி ஆக்கினாள்

  • இப்படி என் வாய்ச்சொல் கேட்டுப் பலர் மாண்டுபோனதால் அந்தப் பாவத்தைப் போக்கக் கங்கையில் நீராட வந்திருக்கிறேன் 
  • பாண்டியன் இறந்த பின் பாண்டிய நாட்டில் என்ன நடந்தது - எனச் சேரன் வினவினான்
  • மாடலன் சேரனைத் தனி இடத்துக்கு அழைத்துச் சென்று சொன்னான்.
  • உன் மைத்துனன் கிள்ளிவளவன்
  • அவன் தாயாதியர் 9 பேர்
  • இவர்கள் இளவரசு பட்டம் பெற முடியாமல் கிள்ளிவளவனை எதிர்த்துப் போரிட்டனர் 
  • அவர் அனைவரையும் ஒரு நாள் போரிலேயே வென்று உன் மைத்துனன் கிள்ளிவளவன் அரசுரிமை பெறுமாறு செய்தவன் நீ  
  • மோகூரில் இருந்துகொண்டு நாடாண்ட பாண்டியனின் காவல்-மரம் வேம்பை வெட்டிய பொறையனே! கேட்டருள் என்று மாடலன் மேலும் சொல்கிறான்
  • நீதிக்காகத் தன் உயிரைக் கொடுத்த பாண்டியனுக்குப் பின்னர்  வெற்றிவேல் செழியன் அரசன் ஆனான்
  • அவன் முதல் பணியாக 1000 பொற்கொல்லர்களைக் கொன்றான்
  • மாடலன் கூறிக்கொண்டிருக்கும்போது பிறைநிலா தோன்றிற்று
  • கணியன் பிறையை நோக்கினான்
  • "வேந்தே! வஞ்சி நகரை விட்டு நாம் புறப்படு 32 மாதங்கள் ஆயின - என்றான்.
  • மாடலனைத் தனியே அழைத்து, சோழ நாட்டில் தன் மைத்துனன் கிள்ளிவளவன் ஆட்சி எவ்வாறு உள்ளது - என வினவினான் 
  • மூன்று தூங்கெயில்களை அழித்த தூங்கெயில் எறிந்த தொடிதோள் செம்பினின் வழி வந்த சோழன் வெற்றிகள் பலவற்றைக் குவித்தான்
  • புறாவுக்காகத் தன் உடலை அரிந்து கொடுத்த சோழனின் வழிவந்த அவன் அறநெறி பிறழாமல் ஆண்டுவருகிறான் - என்றான்
  • செங்குட்டுவன் உடல் 50 கா நிறையளவு கொண்டது
  • தன் எடைக்கு எடை ஆடகப் பொன்னை மாடலனுக்குப் பரிசாக வழங்கினான் 
  • தன்னிடம் தோற்ற கனக விசயரை சோழனுக்கும், பாண்டியனுக்கும் காட்டிவருமாறு 1000 கஞ்சுக வீரர்கள் துணையுடன் அனுப்பினான். 
  • தும்பைப் பூ சூடி வடதிசை நோக்கிச் சென்ற செங்குட்டுவன் படை வாகைப்பூ சூடிக்கொண்டு நாடு திரும்பிற்று.
  • செங்குட்டுவன் மனைவி கனக மாளிகை முத்துப் பந்தல் அன்னத்தூவி மெத்தையில் உறக்கமின்றிக் கிடந்தாள்
  • செவிலியர் அவளுக்கு ஆறுதல் சொல்லிக்கொண்டிருந்தனர்
  • கூன்மகளும், குறுமகளும் ஓடிவந்து செங்குட்டுவன் வருவதை அரசிக்குக் கூறினர்
  • குறத்தியர் தினைப்புனம் காக்கும் பாடல் ஒலி  கேட்டது
  • தேறல் உண்ட கானவன்  மயக்கத்தில் உறங்கிக்கொண்டிருந்தான்
  • குடவர் கோமான் திரும்பினான்
  • நாளைக்கு நல்லேர் விழா - என்று உழவர்கள் பேசிக்கொண்டனர்
  • கோவலர் குழல் ஊதினர்
  • நெய்தல் நில மகளிர் கழங்கு ஆடிக்கொண்டு நெய்தல் பாணி பாடினர்
  • அரசி நானிலப் பண்களையும் கேட்டுக்கொண்டிருந்தாள்
  • வலம்புரி சங்கு ஊதும் ஒலியுடன் செங்குட்டுவன் வந்தான்.

No comments:

Post a Comment