வரிசை எண்ணில் பாடல் தொடுப்பு உள்ளது
- அரண்மனை வாயில் காவலனிடம் கண்ணகி பேசுகிறாள்
- எல்லா
- அரசன் குடையும், கோலும் நிலத்தில் விழும்
- திசையெல்லாம் அதிரும்
- வானவில் ஒடியும்
- விண்மீன்கள் உதிரும்
- எங்கும் இருளும்
- இவற்றை நான் காண்பேன்
- வாயில் காவலன் நினைக்கினான்
- அப்படியாயின் மன்னர்க்கு நான் சொல்ல வேண்டும்
- அரசன் மனைவி கோப்பெருந்தேவி கனா
- அரசன் அரியணையில் இருக்கிறான்
- அரசி தான் கண்ட தீய கனா பற்றிச் சொல்ல அவனிடம் செல்கிறாள்
- அழகியர் வண்ணம், சுண்ணம் முதலான மங்கலப் பொருள்களுடன் அவளோடு செல்கின்றனர்
- வாயில் காவலனிடம் கண்ணகி சொல்கிறாள்
- தவறான தீர்ப்பு சொன்ன அரசனின் வாயில் காவலனே
- கணவனை இழந்த பெண் ஒருத்தி கையில் சிலம்புடன் வாயிலில் நிற்கிறாள் என்று உன் அரசனிடம் சொல்.
- வாயிலோன் மன்னனிடம் கூறுகிறான்
- வாழி வேந்தே
- காளி போல் ஒருத்தி
- கையில் சிலம்பு வைத்துக்கொண்டு
- சினக்கோலத்துடன் வாயிலில் நிற்கிறாள்
- "உள்ளே வர விடுக" என்றான் மன்னன்
- நுழைய விட்டான்
- அரசன் முன் நின்றாள்
- கண்ணீருடன் நிற்பவளே
- நீ யார்
- வேந்தன் வினவினான்
- தேரா மன்னா
- புறாவை காப்பாற்றத் தன்தசையைக் கழுகுக்குத் தந்தவன்
- தன் மகன் மேல் தேரை ஓட்டி, பசுவுக்கு நீதி வழங்கியவன்
- ஆட்சித் தலைநகர் புகார் என் ஊர்
- ஊழ்வினையின் தாக்கத்தால் என் கணவன் உன் நகரில் என் சிலம்பை விற்க வந்தான்
- அவன் உன்னால் கொல்லப்பட்டான்
- நான் அவன் மனைவி கண்ணகி
- கள்வனைக் கொல்லுதல் கடுங்கோல் அன்று
- ஆட்சி முறைமை
- என்றான் அரசன்
- ஆராயாத அரசனே
- என் சிலம்பின் உள்ளே இருக்கும் பரல்கள் மணிக்கற்கள்
- என்றாள் கண்ணகி
- இனியவை சொன்னாய்
- என் சிலம்பில் இருக்கும் பரல் முத்து
- என்றான் அரசன்
- இரண்டு சிலம்புகளையும் கொண்டுவரச் சொன்னான்
- கொண்டு வந்தனர்
- கண்ணகி முன் வைத்தான்
- கண்ணகி தன் சிலம்பை எடுத்தாள்
- உடைத்தாள்
- அதிலிருந்து தெறித்த மணிக்கல் ஒன்று மன்னன் வாயில் பட்டது
- அரசன் மணிக்கல்லைக் கண்டான்
- தன் குடையைச் சாய்த்தான்
- செங்கோலைக் கையிலிருந்து விட்டுவிட்டான்
- பொற்கொல்லன் சொல்லைக் கேட்ட நானோஅரசன்
- நானே கள்வன்
- மக்களைக் காக்கும் பாண்டியர் ஆட்சி என்முதல் பிழைபட்டது
- கெடுக என் ஆயுள்
- என்றான்
- பதறி விழுந்தான்
- மாண்டான்
- கண்ட அரசியும் விழுந்தாள்
- மாண்டாள்
- சேர்க்கப்பட்ட 3 வெண்பாக்கள் வினைவிளைவை உணர்த்துகின்றன
No comments:
Post a Comment