வரிசை எண்ணுக்குள் பாடல் தொடுப்பு உள்ளது
1 --- கண்ணகியின் வஞ்சின முழக்கம்
- அரசன் முறை இல்லாதவன்
- அவன் ஆட்சியில் வாழும் பத்தினிப் பெண்களே
- நான் பெரும் துயரத்தில் இருக்கிறேன்
- என் கணவன் கள்வன் அல்லன்
- என் கல் சிலம்பு ஒன்றையே விற்க வந்தான்
- அதனைப் பிடுங்கிக்கொள்ளக் கொன்றுவிட்டனர்
- என் கணவனைக் காண்பேன்
- உங்கள் கண்முன் அவன் என்னோடு பேசுவான்
- அவன் பேசாவிட்டால் என்னைக் கொடுமைக்காரி எனத் திட்டுங்கள்
- என்று மதுரைத் தெருவெங்கும் முழங்கிக்கொண்டே கண்ணகி சென்றாள்
- கேட்டவர்களின் மனம் குழம்பிற்று
2 --- மக்கள் கலக்கம்
- அரசன் இவளுக்கு நீக்க முடியாத துன்பம் கொடுத்துள்ளான்
- அதனால் அவனது வளையாச் செங்கோல் வளைந்துவிட்டது
- இது சிலம்பு ஒன்றால் விளைந்திருக்கிறது
- என்று சொல்லி அழுதுகொண்டே கோவலன் உடம்பைக் காட்டினர்
- பொழுது இறங்கும் நேரம்
3 --- கண்ணகி புலம்பல்
- குருதி வெள்ளத்தில் கணவனைக் கண்டாள்
- மண்ணில் கிடக்கிறாயே
- இது பாண்டியன் செய்த கொடுமை என்று யாரேனும் சொல்லமாட்டார்களா
- இந்த ஊரில் பெண்கள் இருக்கிறார்களா
- சான்றோர் உள்ளனரா
- தெய்வம் இருக்கிறதா
- என்று சொல்லி, கணவன் மார்பைத் தருவினாள்
- அவன் உணர்வு பெற்று எழுந்தான்
- "உன் முகம் வாடியிருக்கிறதே" - என்றான்
- அவள் கண்ணீரைக் கையால் துடைத்தான்.
- அணைத்த கைகளால் அடிகளைப் பற்றினாள்
- "இரு" என்றான்
- போய்விட்டான்
- இது என்ன மாயமா
- தெய்வம் என்னை மருட்டியதா
- மன்னனிடம் நீதி கேட்பேன்
- என்றாள்
- புகார் நகரில் இருந்தபோது தான் கண்ட கனவை நினைத்தாள்
- அரண்மனை வாயில் முன் நின்றாள்
No comments:
Post a Comment