Pages

Tuesday, 28 April 2026

துன்ப மாலை

வரிசை எண்ணுக்குள் பாடல் தொடுப்பு உள்ளது

1 
  • குரவை ஆட்டம் நடந்துகொண்டிருக்கும்போது மூதாட்டி ஒருத்தி திருமால் கோயிலுக்குச் சென்றாள்
  • கோவலன் கொலையுண்ட செய்தியை கோயிலில் பேசிக்கொண்டிருந்தனர்.
  • அதனைக் கேட்டவள் பதறிக்கொண்டு திரும்பினாள்
  • ஆயர் முன் முதாட்டி எதுவும் பேசாமல் நின்னறள்
  • கண்ணகி கலக்கத்துன் தோழியரை வினவிக்கொண்டிருந்தாள்
  • நேற்று பிற்பகலே என் கணவன் திரும்பியிருக்க வேண்டும்
  • ஊர் மக்கள் என்னதான் பேசிக்கொண்டிருக்கின்றனர் -  என்றாள்
  • அரண்மனைச் சிலம்பை உன் கணவன் திருடிவிட்டான் என்று உன் கணவனைக் கொன்றுவிட்டனர் - என்றாள் முதியவள்.
  • இந்தச் செய்தியைக் கேட்டதும் கண்ணகி பொங்கி எழுந்தாள் 
  • மன்னவன் செய்த தவற்றினால் நான் என் கணவனை இழந்தேன்
  • இதற்காக நான் அழுதுகொண்டு சும்மா இருப்பேனா
  • இப்படிச் சொல்லி அரற்றினாள்
  • குரவை ஆடும் பெண்களே
  • எல்லாரும் கேளுங்கள்
    • காய்கதிர்ச் செல்வனே
    • என் கணவன் கள்வனா
  • உன் கணவன் கள்வன் அல்லன்
  • பெண்ணே
  • இந்த ஊர் எரியப்  போகிறது
    • இப்படி ஒரு குரல் கேட்டது

No comments:

Post a Comment