Pages

Monday, 27 April 2026

ஆய்ச்சியர் ஆட்டம்

வரிசை எண்ணுக்குள் பாடல் தொடுப்பு உள்ளது

  • அரண்மனையில் காலை முரசம் முழங்கிற்று
  • அன்று அவள் அரண்மனைக்கு நெய் வழங்கும் முறைநாள் எனபதை மாதரி நினைத்தாள்
  • தன் மகள் ஐயையை அழைத்துத் தயிர் கடைய மத்தும் கயிறும் கொண்டுவருமாறு கூறினாள்
  • மகள் கொண்டு வந்தாள்
  • குடத்தில் ஊற்றிய பால் உறையவில்லை
  • கன்று பால் குடிக்கத் தாயிடம் செல்லவில்லை
  • இது போல் சில தீய அறிகுறிகள்
  • மாதரி மகளிடம் கூறினாள் 
  • துன்பம் வரப்போகிகிறது
  • ஆயர்பாடியில் மாயவன் பிஞ்ஞையோடு ஆடிய கதையைச் சொல்லி, குரவை ஆடி அவன் அருளைப் பெறலாம் - என்றாள்
  • மாயவன் 7 காளைகளை அடக்கினான்
  • அந்தக் காளைகள்  என்று 7 பெண்கள் நிறுத்தப்பட்டனர்
  • அவர்களை அடக்குவது போல் ஆடினர்
  • 7 பண்ணிசை
  • 7 பெண்
  • யாழில் 7 நரம்புகளை நெருடுவது போல் ஆடினர்
  • ஆடும் பெண்களுக்கு குரல் முலான இசையின் பெயர் சூட்டப்பட்டது
  • மாதரி "ஐ" என்றாள்
  • குரவை ஆட்டம் தொடங்கிற்று
  • கை  விரல்களைக் கோத்துக்கொண்டு 
  • ஏழிசைப் பண் கூட்டி முல்லைத் தீம்பாணி பாடிக்கொண்டு ஆடினர்
  • மாயவன் குழல்  ஊதியதைப் பாடினர்
  • மாயவனின் மாயச் செயல்களைப் பாடினர்
  • யாழில் விரல்கள் பண்ணிசை நரம்புகளை மாறி  மாறித் தொடுவது போல் தொட்டுக்கொண்டு ஆடினர் 
  • பலராமன் பார்த்துக்கொண்டிருக்க
  • மாயவன் நப்பின்னையோடு சேர்ந்து 
  • பூந்தாதுகள் எருவாகக் கொட்டிக் கிடக்கும் மன்றத்தில்
  • ஆடியது போல் ஆடினர். 
  • பாண்டியன் புகழைப் பாடிக்கொண்டு ஆடினர். 
  • மாயன் கடல் கடைந்தது
  • வெண்ணெய் திருடி உண்டது
  • மூவுலகும் அளந்தது
  • ஆகியவற்றைப் போற்றிப் பாடிக்கொண்டு ஆடினர். 
  • திருமால் புகழைக் கேட்காத செவியால் பயன் இல்லை
  • அவன் அழகைக் காணாத கண்களால் பயன் இல்லை
  • அவனை வாழ்த்தாத நாவால் பயன் இல்லை
  • என்றெல்லாம் பாடிக்கொண்டு ஆடினர்.  
  • குரவையில் நாங்கள் போற்றிய தெய்வம் எங்கள் குறையைத் தீர்க்க வேண்டும். 
  • வானவனாகிய இந்திரன் தலையில் வளை உடைத்த பாண்டியன் எப்போதும் வெற்றி பெற வேண்டும் 
  • என வேண்டிக்கொண்டு கூத்தாட்டத்தை நிறைவு செய்தனர்.

No comments:

Post a Comment