1
மாதரி கண்ணகியை எப்படிப் பேணினாள் எனல்
- மாதரி கண்ணகியை அடைக்கலமாகப் பெற்றாள்
- புதிய பந்தல் வீடு கட்டித் தந்தாள்
- ஆய்ச்சியர் மகிழ்வுடன் நீராட்டினர்
- மாதரி தன் மகள் ஐயையைக் கண்ணகிக்குத் தோழி ஆக்கினாள்.
- கோவலனுக்குத் தங்கை என்றாள்
- ஐயை இருவருக்கும் பணிவிடை செய்துவந்தாள்
- நெல்லரிசி, பால், பாகற்காய், வெள்ளரிக்காய், மாம்பழம், வாழைப்பழம் போன்றவற்றைக் கொடுத்து சமைத்து உண்ணும்படி வேண்டினாள்.
- ஐயை அடுப்பு எரித்தாள்
- கண்ணகி சமைத்தாள்
- கோவலன் தாழை இலையால் பின்னப்பட்ட தடுக்கில் அமர்ந்தான்
- மண் மொந்தையில் தண்ணீர்
- வாழை இலையில் உணவு
- "அடிகள்! உண்க" - என்றாள்
- வணிகர் முறைப்படி கோவலன் உணவு உண்டான்.
- இவன் ஆயர்பாடிக் கண்ணனோ
- இவள் இராதையோ
- என்று இருவரையும் எண்ணி ஆயர் வியந்து மகிழ்ந்தனர்
6
- கண்ணகி கோவலனுக்கு வெற்றிலைப் பாக்கு கொடுத்தாள்
- வாங்கித் தின்ற பின் பேசுகிறான்
- "கல்லுக் காட்டில் என்னுடன் நடந்து வந்தாயே
- "நம் தாய்தந்தையர் எப்படி இருக்கிறார்களோ
- "பரத்தையோடு வாழ்ந்தேன்
- "நன்றி கொன்ற எனக்கு உய்தி உண்டோ
- "நான் உனக்குத் தந்த துன்பங்களை நீ நினைக்கவில்லை
- "வா என்றதும் என்னுடன் வந்துவிட்டாய்
- "இதனை நினைக்கும்போது என் மனம் நோகிறது" என்று சொல்லிக்கொண்டு கலங்கினான்.
- என்னை இல்லறக் கடமைகளை செய்யாமல் வாழச் செய்தீர்
- என் தாய் தந்தையரிடம் போலியாகப் புன்னகை காட்டிக்கொண்டு நான் வாழ்ந்தேன். இந்த நிலைக்கு என்னை ஆளாக்கினீர்
- உன்னை நான் திருத்தவில்லை - என்று கண்ணகி கூறினாள்.
- சுற்றத்தார், தோழியர், அடியோர் அனைவரையும் விட்டுவிட்டு வந்திருக்கிறாய்.
- சிலம்பை விற்று வருவேன்
- அதுவரைக் கலங்காமல் இரு - என்றான்
- அவனது கண்கள் கலங்கின.
- தெருவில் நுழைந்தான்
காளைமாடு எதிர் திசையில் குறுக்கிட்டது
- இது தீய நிமித்தம் என்பது கோவலனுக்குத் தெரியாது
- ஆயர் தெருவைக் கடந்து வணிகர் தெருவில் நடந்தான்
அணி ஒன்றுக்கு விலை மதிப்பிட முடியுமா
- பொற்கொல்லன் ஒருவன் நூற்றுக் கணக்கானோர் பின்தொடர எதிரே வந்துகொண்டிருந்தான்
- அவனை அரச பொற்கொல்லன் என்று கோவலன் நினைத்தான்
- "அரசி அணியத்தக்க காலணி ஒன்றுக்கு விலை மதிப்பிட முடியுமா" என வினவினான்.
- எனினும் அரசனின் தலைமுடி முதலானவற்றைச் செய்பவன் நான்தான் - என்றான் பொற்கொல்லன்
- கோவலன் சிலம்பைக் காட்டினான்.
- பொற்கொல்லன் பார்த்தான்
- பத்திக் கோவணம் என்னும் பொன்னால் செய்யப்பட்டு, உயர்ந்த வேலைப்பாடு கொண்டிருப்பதை உணர்ந்தான்
- அரசி மட்டுமே அணியத் தக்கது - என்றான்
- அதுவரை என் குடிலில் இரு
- என அமர்த்திவிட்டுச் சென்றான்
- அரசி சிலம்பை நான் திருடு வைத்திப்பதை மறைக்க ஆள் கிடைத்துவிட்டான் என்று எண்ணிக்கொண்டான்.
- ஆடல் மகளிர் அழகில் அரசன் மயங்கினான் என ஊடிய அரசி அந்தப்புரம் சென்றுவிட்டாள்
- அரசியின் ஊடலைத் தீர்க்க அரசன் அவளிடம் சென்றுகொண்டிருக்கிறான்
- அந்தப்புர வாயிலில் பொன்கொல்லன் அரசனை எதிர்கொள்கிறான்.
- அரசி சிலம்பைத் திருடிய கள்வன் அகப்பட்டுக்கொண்டான்
- அவனைப் பிடித்து என் குடிலில் வைத்திருக்கிறேன் - என்றான்
- அரசன் ஆராய்ந்து பார்க்கவில்லை
- சிலம்பு அவன் கையில் இருந்தால், அவனைக் கொன்றுவிட்டு, சிலம்பைக் கொண்டுவாருங்கள் - என்று சொல்லிக் காவலரை அனுப்பினான்
- இவர்கள் சிலம்பைப் காண வந்துள்ளனர்
- சிலம்பைக் காட்டு - என்றான்
- காட்டினான்
- இவன் முகத்தைப் பார்த்தால் கள்வன் என்று தோன்றவில்லை
- இவனைக் கொல்லக்கூடாது
- என்று சிலர் பேசிக்கொண்டனர்.
- பொற்கொல்லன் திருடன் ஏமாற்றுவான் என்று அவர்களிடம் விளக்கிச் சொல்கிறான்
- கொல்லாவிட்டால் அரசனால் தண்டிக்கப்படுவீர் - என அச்சுறுத்தினான்
- திருடர்கள் 8 வகையாகத் தந்திரம் செய்து ஏமாற்றுவர் என்று கூறிப் பொற்கொல்லன் ஒவ்வொன்றாக எடுத்துரைக்கிறான்
- பொற்கொல்லன் திருனைப் பற்றி ஒரு கதை சொன்னான்
- காவலன் ஒருவன் மற்றொரு கதை சொல்லிக்கொண்டிருந்தான்
- காவலன் கதை சொல்லிக்கொண்டிருக்கும்போதே கள்ளுண்ட போதையில் இருக்கும் ஒரு காவலன் கோவலனை வெட்டி வீழ்த்தினான்
- எல்லாம் பண்டைய விதியின் விளைவு
கண்ணகி வாழ்க்கை பற்றிச் சிலப்பதிகாரம் கூறும் செய்திகள் --- தொடுப்புகளைச் சொடுக்கி, பாடல் பகுதியையும், விளக்கத்தையும் பெறலாம்.
No comments:
Post a Comment