Pages

Tuesday, 28 April 2026

மதுரையை எரித்தது

வரிசை எண்ணில் பாடல் தொடுப்பு உள்ளது

  • வேந்தன் தேவியே! கேள். 
  • முற்பகலில் ஒருவனுக்குக் கேடு செய்தால் பிற்பகலில் அவனுக்குக் கேடு விளையும்
  • இதுதான் உன் கணவனுக்கு நிகழ்ந்துள்ளது
  • புகார் நகரில் வாழ்ந்த கற்புடை மாந்தர் 7 பேர்
  1. வன்னி மரத்தைத் திருமணத்துக்கு சாட்சியாக நிறுத்தியவள்
  2. அற்றங்கரை மணல்-பாவையை, கணவன் எனக் காத்தவள்
  3. காவிரியாறு இழுத்துச் சென்ற காதலன் ஆட்டனத்தியை ஆற்று வெள்ளத்திடம் கேட்டுப் பெற்றவள் 
  4. வாணிகம் செய்யக் கப்பலில் சென்றவன் திரும்பும் வரையில் கடற்கரையில் கல்லாய் நின்று கணவன் திரும்பியதும் பெண் ஆனவள்
  5. மாற்றாள் குழந்தை கிணற்றில் விழ, தன் குழந்தையையும் கிணற்றில் எறிந்து இரண்டையும் மீட்டுக்கொண்டவள்
  6. கணவன் திரும்பும் வரை, தன் முகத்தைக் குரங்கு-முகம் ஆக்கிக் கொண்டவள்
  7. தந்தை மறுத்தும், தாய் அவள் தோழிக்குத் தந்த வாக்கின்படி, ஏழை ஒருவனை மணந்துகொண்டவள்
  • இப்படிப்பட்டவர் வாழ்ந்த புகார் நகரில் பிறந்தேன் - என்று கண்ணகி பாண்டிமாதேவியிடம் கூறினாள். 
  • நானும் ஒரு பத்தினி என்றால் மதுரையை எரிப்பேன் - என்றாள் கண்ணகி
  • மதுரையை மூன்று முறை வலம்வந்தாள்.
  • தன் இடப்பக்க முலையைத் திருகி மதுரை மீது எரிந்தாள்
  • தீக் கடவுள் அவள் முன் நின்றான்
  • எரிக்கும்போது யார் யாரை எரிக்காமல் விடவேண்டும் என வினவினான். 
  • பார்ப்பார், அறவோர், பசு, பத்தினிப் பெண்டிர், மூத்தோர், குழந்தை - ஆகியவர்களை விட்டுவிட்டுத் தீய செயல் புரிபவர் பக்கம் சென்று எரிப்பாயாக - என்று கண்ணகி கூறினாள். அவ்வாறே மதுரை மாநகரம் எரிந்தது.
  • வெண்பா

No comments:

Post a Comment