வரிசை எண்ணில் பாடல் தொடுப்பு உள்ளது
- மதுரைத் தெய்வம் (மதுரை மீனாட்சி) கண்ணகியைப் பின்தொடர்ந்து நடந்துகொண்டிருந்தாள்
- அவள் தோற்றம் பற்றிப் பாடல் விரிவாகப் பேசுகிறது
- "பெண்ணே கேள்" என்று தெய்வம் பேசிற்று.
- கண்ணகி முகத்தை மட்டும் திருப்பிப் பார்த்தாள்
- பெருமாட்டியே நீ யார்
- என்னைப் பற்றி அறிவாயா
- என்று வினவினாள்
- அறிவேன்
- என் பெயர் கூடல் மதுராபதி
- உன் கணவனுக்கு நேர்ந்தது பற்றிச் சொல்ல வருகிறேன்.
- பாண்டியன் அறனிலை பிறழாதவன்
- கதவைத் தட்டிய குற்றத்துக்காக, தன் கையைத் தானே வெட்டிக்கொண்டு, பொற்கைப் பாண்டியன் ஆனவன், பாண்டியன்.
- பாரதப் போரில் இருதிறப் படைகளுக்கும் பெருஞ்சோறு அளித்த சேரனிடம் பரிசில் பெற்ற பராசரன் என்னும் பார்ப்பான் ஊர் திரும்பிக்கொண்டிருந்தான்
- வழியில் பாண்டி நாட்டுத் தங்கால் என்னும் ஊரில் இளைப்பாறினான்.
- சிறுவர்கள் அவனைச் சூழ்ந்துகொண்டனர்
- அவன் சிறுவர்களுக்கு வேதம் சொல்லிக்கொடுத்தான்
- வார்த்திகன் என்னும் சிறுவன் எளிதில் கற்றுக்கொண்டு ஓதிக் காட்டினான்
- வார்த்திகனுக்குப் பராசரன் தான் சேரனிடம் பெற்றுவந்த பரிசுகளில் சிறந்தவை சிலவற்றை வழங்கினான்.
- பின்னர் தன் ஊர் புகார் நகரம் மீண்டான்
- பராசரன் தந்த அணிகலன்களை வார்த்திகன் அணிந்திருந்தான்
- அதனைக் கண்ட ஊர்மக்கள் இளவரசன் நகைகளை வார்த்திகன் திருடிக்கொண்டான் என்று அவனைச் சிறையில் இடச்செய்தனர்.
- அதனைக் கண்ட வார்த்திகன் மனைவி கார்த்திகை காளி கோயிலில் முறையிட்டாள்.
- காளி தன் கோயில் கதவைச் சாத்திக்கொண்டாள்.
- காளிகோயில் கதவு திறக்க முடியாமல் போனதைப் பாண்டியன் அறிந்தான்.
- என் ஆட்சியில் கொடுமை நடக்கிறதா - என மன்னன் வினவினான்.
- சிறையிலிருந்த வார்த்திகன் கொண்டுவரப்பட்டான்.
- அவனிடமிருந்து மன்னன் உண்மையை உணர்ந்தான்.
- வார்த்ததிகனை விடுவித்தான்
- மேலும் நிலக்கொடைகளும் வார்த்திகனுக்கு வழங்கினான்
- கார்த்திகை மகிழ்ந்தாள்
- காளி கோயில் கதவம் தானே திறந்துகொண்டது
- பாண்டியன் நீதி தவறான் - என்று மதுராபதி தெய்வம் கண்ணகிக்கு இந்த நிகழ்வைக் கூறிற்று.
- ஆடி - தேய்பிறை - 8 ஆம் நாள் மதுரை எரியும் - என்னும் சாபம் இருந்ததுபற்றி மதுராபதி தெய்வம் கூறுகிறது.
- அண்ணன் தம்பியர் சிங்கபுரம், கபிலபுரம் என்னும் ஊர்களில் இருந்துகொண்டு நாடாண்டு வந்தனர்
- இரு நாடுகளுக்கும் இடையில் ஆறு
- காத தூரம்
- இந்த இடைவெளியில் யாரும் செல்வதில்லை
- சிங்கபுரத்து வணிகன் சங்கமன் வணிகத்தின் பொருட்டு அந்த இடைவழிப் பகுதியில் தன் மனைவி நீலி என்பவளுடன் சென்றுகொண்டிருந்தான்.
- வணிக மூலதனமாகப் பெருஞ்செல்வம் வைத்திருந்தான்.
- பரதன் என்பவன் கபிலபுர அரசனின் ஆளாக அப்பகுதியைக் காத்துவந்தான்.
- பரதன் சங்கமனை ஒற்றன் என்று தன் மன்னனிடம் காட்டிக் கொலை செய்தான்.
- மனைவி நீலி அழுது புலம்பினாள்.
- 7 ஆம் நாள் கணவனுடன் வானுலகம் சென்றாள்.
- அப்போது பரதனைச் சபித்தாள்
- "எனக்குத் துன்பம் செய்த நீ இதே துன்பத்ததை அனுபவிப்பாயாக" - இதுதான் அந்தச் சாபம்.
- பரதன் - கோவலன்
- நீலி - கண்ணகி
- முற்பிறவி வினை பின் பிறவியில் தாக்கும்
- இன்றைக்குப் 14 ஆம் நாள் நீ உன் கணவனை வானோர் வடிவில் பெறுவாய்
- என்று மதுராபதி தெய்வம் கண்ணகியிடம் கூறிற்று.
- கிழக்கு வாயில் வழியே மதுரைக்குள் நுழைந்தேன்
- மேற்கு வாயில் வழியே நீங்குகிறேன்
- என்று மதுராபுரித் தெய்வத்திடம் கண்ணகி கூறினாள்
- வைகை ஆற்றின் ஒருபுறக் கரை வழியே நடந்தான்
- நெடுவேள் குன்றத்தில் ஏறினாள்
- வேங்கை மரத்தடியில் நின்றாள்
- தேவேந்திரன் கோவலனுடன் வான-ஊர்தியில் வந்து கண்ணகியை வானுலகுக்குக் கொண்டு சென்றான்.
- வெண்பா
- தெய்வத்தைத் தொழாமல் கொழுநனைத் தொழுபவளை, தெய்வம் தொழும்.
- இதில் உள்ள கட்டுரை மதுரைக் காண்டத்தின் செய்திகளைத் தொகுத்துக் கூறுகிறது.
- அரசன் ஆரியப்படை கடந்த நெடுஞ்செழியன்.
No comments:
Post a Comment