வரிசை எண்ணுக்குள் பாடல் தொடுப்பு உள்ளது.
- வாய்வாள் கோதை எனப் போற்றப்படுபவன் சேரன் செங்குட்டுவன்
- கடல் போரில் கடம்பர்களை வென்றவன்
- இமயத்தில் வில் பொறித்தவரின் வழித்தோன்றல்
- இலவந்தி என்பது அவன் வாழும் வெள்ளை-மாளிகை
- அவன் மனைவி இளங்கோ வேண்மாள்
- மலைவளம் காணவேண்டும் என்று இவளுடன் மாடத்தில் இருக்கும்போது விரும்பினான்
- அரசு சுற்றம் சூழப் புறப்பட்டுச் சென்றான்
- தலைநகர் வஞ்சிமுற்றத்தை விட்டுச் சென்றான்
- பேராறு (பேரியாறு) பாயுமிடம் சென்றான்
- யானைமேல் ஏறிக் கண்டு களித்தான்
- அதன் மணல் பரப்பில் அரசச் சுற்றம் சூழ அமர்ந்திருந்தான்.
- குன்றக் குரவை பாடும் ஒலி கேட்டது
- வள்ளைப்பாட்டு,
- தேன் எடுக்கும் ஒலி
- பாகர் யானையைப் பழக்கும் ஒலி
- முதலான பல்வகை ஓசைகள் கேட்டன.
- கானவர் அரசனுக்குத் திறைப்பொருள்கள் கொண்டுவந்தனர்
- அவற்றில் யானைத்தந்தம், அகில் முலான எண்ணற்ற பொருள்கள் இருந்தன.
- காணிக்கை கொண்டுவந்த மலைக்குறவர்கள் கண்ணகி வானில் சென்றது பற்றிக் கூறினர்.
- அவள் யாரோ
- எந்த நாட்டவளோ
- இந்த நாட்டுக்கு வந்தாள்
- என்று கூறினர்
- மன்னன் மலைவளம் காணும்போது (மணிமேகலை காப்பியம் இயற்றிய) தண்டமிழ்ச் சாத்தன் உடனிருந்தார்.
- அந்தப் பெண்ணைப்பற்றிய செய்திகள் தனக்குத் தெரியும் என்று அனைத்தையும் கூறினார்.
- "உன்னிடம் முறையிடுபவள் போலச் சேரநாட்டுக்கு வந்திருக்கிறாள்" - என்றார்.
- முறை தவறிய செய்தி பிற மன்னர் அறிவதற்கு முன் பாண்டியன் தன் உயிரை விட்டது அவனது வளைந்த கோலைச் செங்கோல் ஆக்கி இருக்கிறது - என்றான் சேரன்
- மக்களைக் காக்கும் மன்னனாகப் பிறத்தல் துன்பம் தருவதே அல்லாமல், தொழும் தகைமை உடையது அன்று - என்றான்
- இரண்டு பெண்கள்
- ஒருத்தி கணவனுடன் உயிர் துறந்த பாண்டிமாதேவி
- மற்றொருத்தி போராடி இந்நாட்டுக்கு வந்தவள்
- இருவரில் யார் வியப்புக்கு உரியவர்
- என்று சேரன் தன் மனைவி வேண்மாளை வினவினான்.
- காதலனுடன் உயிர் துறந்த பாண்டியன் மனைவி கற்பு சிறந்ததுதான்
- என்றாலும்
- கற்பரசி என்பதை நிலைநாட்டிக்கொண்டு நம் நாட்டுக்கு வந்த கண்ணகியை நாம் வாழ்த்தி வணங்க வேண்டும் - என்றாள் சேரன் மனைவி.
- சேரன் சிற்பக் கலைஞனைப் பார்த்தான்
- கலைஞன் புரிந்துகொண்டான்
- சிலை செய்யும் கல்லை,
- பாண்டினின் பொதிய மலையில் எடுத்து, சோழனின் காவிரியில் நீராட்டிக் கொண்டுவரலாம்
- இமய மலையில் எடுத்து கங்கையில் நீராட்டிக் கொண்டுவரலாம்
- இரண்டும் தகவு தகவுடைய செயல்தான் - என்றான்.
- இமயத்தில் கல் எடுத்துவரலே தனக்குப் பெருமை எனச் சேரன் கருதினான்.
- போர் தொடங்கும் வஞ்சி மலர் சூடிக்கொண்டு சேரர் படை புறப்பட்டது.
- வீரர்களுக்குப் பெருஞ்சோறு வழங்கப்பட்டது.
- வில்லவன் கோதை என்பவன் சேரர் படையின் தலைவன்
- கொங்கு நாட்டில் பாண்டியனையும், சோழனையும் வென்ற புகழ் மறைந்துகொண்டு வருகிறது
- வடதிசை மன்னர்களை வெல்லவேண்டும்
- ஓலை அனுப்புங்கள் - என்றான் வில்லவன்.
- அழும்பில் வேள் என்பவன் சேரனின் அமைச்சன்
- இவன் சொல்கிறான்
- மற்ற நாட்டு ஒற்றர்கள் நம் வஞ்சி நகரில் இருக்கின்றனர்.
- "இமயத்தில் கண்ணகிக்குக் கல் எடுக்கச் சேரன் வருகிறான்
- "எல்லாரும் பணிந்து திறை கொடுக்க வேண்டும்
- "இல்லாவிட்டால்
- "இவன்
- "கடம்பர்களைக் கடற்படை கொண்டு வென்றது போலவும்
- "இமயத்தில் இவன் முன்னோன் வில் சின்னம் பொறித்தபோது நிகழ்ந்தது போலவும்
- "நிகழும் என்பதை நினைவில் கொள்ளுங்கள்" -
- இவ்வாறு கூறி வஞ்சி நகரில் முரசு அறையப்பட்டது.
No comments:
Post a Comment