வரிசை எண்ணுக்குள் பாடல் தொடுப்பு உள்ளது
- குன்றக் குறத்தியர் கண்ணகியை வினவுகின்றனர்
- எங்கள் தெய்வம் வள்ளி போல் வேங்கை மர நிழலில் நிற்கின்றீர்
- நாங்கள் நடுங்கும்படி ஒரு முலையை இழந்து நிற்கின்றீர்
- நீர் யார் என அறியலாமா
- ஊழ்வினை வந்து உருத்திய காலத்தில் மதுரை நகரில் கணவனை இழந்து இங்கு வந்திருக்கும் கொடிய வினைக்காரி நான் - என்று சினம் தணிந்த நிலையில் கண்ணகி மலைக்குறத்தியரிடம் கூறினாள்.
- கேட்டதும் குறத்தியர் கைகூப்பி, கண்ணகியை வணங்கினர்
- அப்போது மலர்-மாரி பொழிந்தது
- வானவர் தலைவன் கோவலனுடன் வந்து கண்ணகியை அழைத்துச் சென்றான்.
- இதனைக் கண்ட மலைக்குறத்தியர்
- இவளைத் தெய்வமாக வழிபடுவோம்
- பறம்பு மலை அருவி ஓரத்தில் இவளுக்குக் கல் நடுவோம்
- நம் இசைக்கருவிகளை முழக்குவோம்
- விழா எடுப்போம்
- இவள் ஒருமுலை இழந்த நங்கை தெய்வம்
- என்று தீர்மானிக்கின்றனர்.
குரவை என்பது ஒரு நடனக்கூத்து. இது பாடிக்கொண்டு ஆடப்படும். இங்குள்ள பாட்டு கொச்சகக் கலிப்பா யாப்பிசை கொண்டதாக உள்ளது. இதில் தரவு, மூன்றடுக்குத் தாழிசை என்னும் உறுப்புகள் இடம் மயங்கி வந்து இறுதியில் சுரிதகம் கொண்டதாக அமைந்துள்ளது.
- குரவை ஆட்டம்
- அருவியில் நீராடுவது போல் நடனம் ஆடுகின்றனர்
- (கலிப்பா - தரவு)
- புனல் ஓடுகிறது என்று பாடிக்கொண்டே ஆடுகின்றனர்
- (3 தாழிசைப் பாடல்)
- வேலவன் முருகன் மலைத்தெய்வம்
- மாமரத்தை வெட்டி வீழ்த்திய வேலைப் பாடுவோம் (தரவு)
- சூரபன்மனைக் கொன்றது
- மயிலில் ஏறியது
- சரவணப் பொய்கையில் 6 தாய்மாரிடம் பால் உண்டது (3 தாழிசை)
- பற்றிக் பாடுவோம்
- வெறியாட வேலன் வருக (தரவு) (தோழி கூற்று)
- வெற்பன் செய்த நோயைத் தீர்க வேலன் வந்தால் அவன் மடவன் (3 தாழிசை) (தலைவி கூற்று)
- வேலன் வந்தால் வெற்பனோடு திருமணம் நடக்க உதவ வேண்டும் என்று அவனை வேண்டிக்கொள்வோம் - என்று தோழி கூறும் பாட்டு
- வெற்பனோடு தலைவிக்குத் திருமணம் நடத்திவை என வேண்டும் 3 தாழிசைப் பாட்டு.
- பாடி ஆடுகின்றனர்
- இந்தப் பாட்டாட்டதை தலைவன் மறைந்திருந்து கேட்டு, திருமண மாலையுடன் வெளிப்பட்டு வர தலைவி தலைவனின் அடிகளைத் தொழுவதாகச் சொல்லும் பாட்டு (கலிப்பா சுரிதகம்)
- (இத்துடன் கலிப்பா முடிகிறது)
- என் தலைவிக்கு வேலன் தெய்வம் அன்று
- வெற்பனாகிய நீதான் தெய்வம்
- என்று தோழி வெற்பனாகிய தலைவனிடம் கூறுகிறாள்
இங்கே
பாடுபொருள்
மாறுகிறது
- இனி முலையால் மதுரையை எரித்து கணவனுடன் வானுலகம் சென்றவளைப் பாடிக் குரவை ஆடுவோம் என்கின்றனர்.
- கண்ணகி மதுரையை எரித்ததைப் பாறிக்கொண்டு குரவை ஆடுகின்றனர்.
- கணவனுடன் வானுலகம் சென்ற காட்சி பற்றிப் பேசிக்கொள்வதை மக்கள் நிறுத்தவே இல்லை
- வானுலகம் சென்றவள் திரும்பி வரமாட்டாள்
- இவளைப் பாடும் மகளிர் தாம் விரும்பும் கணவனை அடைவர்.
- என்கின்றனர்
- குரவையில் பாடியது கேட்டுத் தலைவன் வந்தான்.
- கொல்லிமலையை ஆளும் குடவர் கோமான் வாழ்க
- இமயத்தில் வில் பொறித்த சேரன் வாழ்க
- என்று கூறி இந்த கூத்து முடிகிறது.
No comments:
Post a Comment