முதுகுன்றைப் போற்றும் பாடல்கள்
![]() |
| முதுகுன்றம் பச்சைக் கொடியும் படரும் பழமலை |
நீற்றை அணிந்து நினைந்து உருகி நெஞ்சமே
போற்று செழுந்திருவின் பூமானும் - சாற்றும்
கலைக்கிழத்திக் கோனும் கருதரிய கோல
மலைக்கிழத்தி கோமான் வரும்.
- திருவின் பூமான் - திருமால்
- கலைக்கிழக்கோன் - பிரமன்
- இவர்களால் நினக்கவும் முடியாதவன் மலைக்கிழத்திக் கோன் - சிவன்
- சிவனைத் திருநீறு அணிந்து போற்று.
மன் அருணையோ நமசிவாய குருராயனது
பொன்னடியில் என்னைப் பொருத்துவாய் - துன்னனுமலர்ப்
பாதா, மலைக்கிழத்தி பாகா, பரமசிவ
நாதா, பழமலை வாணா.
- மணிதுத்தாறு பாயும் பழமலை வாணா! நமசியாய குருராயன் அடிகளின் என்னைச் சேர்.
விருப்பாய் முதுகுன்றின் மெய் புதுமை கேளீர்
நெருப்பாய் மலை ஒன்று நிறுகும் - பொருப்பில் ஒரு
பச்சைக் கொடியும் படரும் அதனருகே
உச்சிக்கே அறும் ஓடும்.
- ஒரு மலை நெருப்பாய் நிறுகிறது
- இந்த மலையில் பச்சைக்கொடி (உமை) படர்கிறது.
- இது புதுமை.
"சிதம்பரத்தில் தெய்வீகமுற்று விளங்கிய குரு நமச்சிவாய தேவ சுவாமிகள் அருளிச் செய்த சிவக்ஷேத்திரக் கோவைத் திருவெண்பா" என்று தலைப்பிட்ட நூல் ஒன்று 9 வெண்பாக்களுடன் உள்ளது.
இவை பெருநூல் ஒன்றின் பகுதியா, தனிநூலா என்பது விளங்கவில்லை.
இது விருத்தாசல புராணம் நூலின் இணைப்பாக உள்ளது.
இதன் 2 பாடல்கள் "மலைக்கிழத்தி" என்று இவ்வூர் மலைத் தேவியைக் குறிப்பிடுகின்றன.
அதன் 6 ஆம் பாடலில் "ஓம் நமசிவாய குரு" என்று ஆசிரியர் பெயர் வருகிறது.
இதனால் இந்த நூலின் ஆசிரியர் குருநமச்சிவாயர் எனக் கொள்ளலாம். அவற்றில் உள்ள 3 பாடல்கள்.
மு அருணாசலம், தமிழ் இலக்கிய வரலாறு, \16 ஆம் நூற்றாண்டு, பாகம் 3, பக்கம் 178

.jpg)
No comments:
Post a Comment