தமிழரின் நெஞ்சைக் காட்டும், வாழ்வியலை விளக்கும், புதிய புதிய சொற்றொடர் பூக்கும் 300+ நூல், 30,000+ பாடல் - விளக்கம்
Pages
▼
Sunday, 5 October 2025
அறிவு இருக்குமிடம்
அறிவு வளரும்
கடலோர மணல்கேணி தோண்டத் தோண்ட அதிகமாக நீர் ஊறும். அதுபோலக் கற்கக் கற்க அறிவு வளரும்.
As you dig a sand pit on the beach, more water will seep in. Similarly, knowledge grows as you learn.
தொட்டனைத்து ஊறும் மணல் கேணி மாந்தர்க்கு கற்றனைத்து ஊறும் அறிவு - குறள் 40
அறிவு இருக்குமிடம்
அறிவு மனத்தில் உள்ளது போலத் தோன்றும். உண்மையில் அந்த அறிவானது அவனைச் சூழ்ந்திருக்கும் இனம் என்ன செய்கிறதோ அதைத்தான் நினைத்துக்கொண்டிருக்கும்.
Knowledge seems to be in the mind. In reality, that knowledge is just thinking about what the people around him are doing.
மனத்து உளது போல காட்டி ஒருவற்கு இனத்து உளது ஆகும் அறிவு - குறள் 46:4
மற்றவர்களை
உப்பு மண்ணில் ஊறும் நீர் உப்புச் சுவை கொண்டிருக்கும். செம்மண்ணை அடித்துக்கொண்டு வரும் நீர் சிவப்பு நிறம் கொண்டிருக்கும். அதுபோல அறிவானது சூழ்ந்திருக்கும் மக்களை நினைத்துக்கொண்டிருக்கும்.
Water that soaks into salty soil tastes salty. Water that soaks into red soil tastes red. Similarly, knowledge thinks of the people around it.
நிலத்து இயல்பான் நீர் திரிந்து அற்று ஆகும் மாந்தர்க்கு இனத்து இயல்பது ஆகும் அறிவு - குறள் 46:2
No comments:
Post a Comment