மதிலரசர் பலர்
உழிஞை அரசனைப்
பணிவது பற்றிக் கூறுவது
தொகைநிலை என்னும்
புறப்பொருள் துறை ஆகும்.
இதனைச் சொல்லும் மேற்கோள் பாடல்:
நாவல் பெயரிய ஞாலத்து அடி அடைந்து
ஏவல் எதிரா இகல் புரிந்த - காவலர்
வின் நின்ற தானை விறல் வெய்யோற்கு அம் மதிலின்
முன் நின்று அவிந்தார் முரண்
- உழிஞை மன்னனோடு முன்பு மாறுபட்டு நின்ற பல அரசர்கள், அவன் ‘வின்’ என்று விறலுடன் மதிலைத் தாக்கி வென்ற பின்னர், அவனுக்கும் தனக்கும் இருந்த முரண்பாட்டை விட்டு, வாயடங்கிப் போயினர்.
உழிஞைப்படலம் / உழிஞைத்திணை
புறப்பொருள் வெண்பா மாலை PDF பக்கம் 90
பாடல் - சொல் பிரிப்பு
புதுப்புது சொற்றொடர்
No comments:
Post a Comment