Pages

Tuesday, 17 June 2025

தொகைநிலை 6-32

மதிலரசர் பலர் 
உழிஞை அரசனைப் 
பணிவது பற்றிக் கூறுவது 
தொகைநிலை என்னும் 
புறப்பொருள் துறை ஆகும். 

இதனைச் சொல்லும் மேற்கோள் பாடல்:

நாவல் பெயரிய ஞாலத்து அடி அடைந்து 
ஏவல் எதிரா இகல் புரிந்த - காவலர் 
வின் நின்ற தானை விறல் வெய்யோற்கு அம் மதிலின் 
முன் நின்று அவிந்தார் முரண்  

  • உழிஞை மன்னனோடு முன்பு மாறுபட்டு நின்ற பல அரசர்கள், அவன் ‘வின்’ என்று விறலுடன் மதிலைத் தாக்கி வென்ற பின்னர், அவனுக்கும் தனக்கும் இருந்த முரண்பாட்டை விட்டு, வாயடங்கிப் போயினர். 

உழிஞைப்படலம் / உழிஞைத்திணை

பாடல் - சொல் பிரிப்பு
புதுப்புது சொற்றொடர்

No comments:

Post a Comment