Pages

Sunday, 21 April 2019

குறுந்தொகை 231 Kurunthogai 231

அவர் நான் வாழும் இதே ஊரில்தான் வாழ்கிறார்.
எனாலும் நான் இருக்கும் இந்தத் தெருவுக்கு வருவதில்லை
இந்தத் தெருவுக்கு வந்தாலும் என்னை ஆரத் தழுவுவதில்லை
பக்கத்து வீட்டில் அடுப்பு எரிவது போலக் கண்டும் காணாமல் போய்விடுகிறார்

என் வீட்டு அடுப்பு எரிந்தால்தானே எனக்குச் சோறு
அறிவில்லாமல் நாணத்தை விட்டுவிட்டு என் காமம்  பாய்கிறது
வில்லிலிருந்து பாயும் அம்பு போல் தொலைவில் உள்ள அவரிடம் பாய்கிறது.

தலைவி தன் தோழியிடம் தன் உணர்வை வெளிப்படுத்துகிறாள். 

இதனைச் சொடுக்கிப் பாடலும் விளக்கமும் காணலாம்

No comments:

Post a Comment