முழங்கும் கடலின் வண்ணம் கொண்டவன் திருமால்.
அவன் மார்பில் இருக்கும் மாலை போல் வானவில் தோன்றி மழை பொழியும் காலத்தில் திரும்பி
வந்துவிடுவேன் என்று சொன்னவர் வரவில்லை போல் தெரிகிறதே. வானம் கருவுற்றிருந்து ஆலித்
துளிகளுடன் மழை பொழிகிறதே. – தலைவி சொல்கிறாள்.
![]() |
| திருமால் மார்வில் ஆரம் |
பாடல், சொல் பிரிப்புப் பதிப்பு
பொரு கடல் வண்ணன்
புனை மார்பில் தார்போல்,
திருவில் விலங்கு ஊன்றி, தீம்
பெயல் தாழ,
'வருதும்' என மொழிந்தார் வாரார்கொல்,
வானம்
கரு இருந்து ஆலிக்கும்
போழ்து? 1
அகப்பொருள் முல்லைத்திணை ஒழுக்கம் பற்றிக்
கூறும் 40 பாடல்கள் கொண்ட நூல் கார்நாற்பது. இதனை இயற்றியவர் மதுரைக்
கண்ணங்கூத்தனார். காலம்
மூன்றாம் நூற்றாண்டின் பிற்பகுதி.

No comments:
Post a Comment