கிளி ஓட்டும் மகளிர் குரல் போல
மயில் அகவும்
குரல் இருக்கும்.
1
பெருமழை பொழிந்த பின்
புலரும் விடியற்கால
வேளையில்
உழவர் ஏர் பூட்டி உழுவர்.
அவ்வாறு உழுது புறண்டு கிடக்கும் ஈரமுள்ள செம்புழுதி
கிழித்த புண் போலத் தோன்றும்.
அதில் விதைத்த விதை முளைத்து வளரும்.
2
கிளைக்கொம்பு கொண்ட இரலைமான்
ஆங்காங்கே மேய்வது
போல
உழவர்கள் தலையில் குடையை மாட்டிக்கொண்டு
பாடிக்கொண்டே களை வெட்டுவார்கள்.
3
களை எடுத்த வரகு கதிர் வாங்கும்.
அதனை,
தலையில்
குடுமி கொண்ட மயில்
தன் தோகையை விரித்துக்கொண்டு மேயும்.
4
பின்னர்
அந்த மயில்
வலிமையான இலைகளைக் கொண்ட
குருந்த மரத்தில்
ஏறி இருந்துகொண்டு,
கிளியோட்டும் மகளிர் பாடுவது போலக்
குரல் எழுப்பி
அகவும்.
இப்படி மயில் அகவும் கார் காலம் இது அல்லவா?
தோழி!
5
தேரில் ஏறிக்
குதிரையை
முடுக்கிக்கொண்டு வந்துவிடுவேன்
என்று நம்மிடம் சொல்லிச் சென்றாரே
அந்தக் கார்காலம்
இது அல்லவா,
தோழி?
தலைவி தோழியிடம் இவ்வாறு வினவுகிறாள்.
பாடல் சொல் பிரிப்புப்
பதிவு
திணை, முல்லை
1
பேர் உறை தலைஇய பெரும் புலர் வைகறை,
ஏர் இடம் படுத்த இரு மறுப் பூழிப்
புறம் மாறு பெற்ற பூவல் ஈரத்து,
ஊன் கிழித்தன்ன செஞ் சுவல் நெடுஞ் சால்,
வித்திய மருங்கின் விதை பல நாறி, 5
2
இரலை நல் மானினம் பரந்தவைபோல்,
கோடுடைத் தலைக்குடை சூடிய வினைஞர்,
கறங்கு பறைச் சீரின் இரங்க வாங்கி,
3
களை கால் கழீஇய பெரும் புன வரகின்
கவைக் கதிர் இரும் புறம் கதூஉ உண்ட, 10
குடுமி நெற்றி, நெடு மாத் தோகை
காமர் கலவம் பரப்பி, ஏமுறக்
4
கொல்லை உழவர் கூழ் நிழல் ஒழித்த
வல் இலைக் குருந்தின் வாங்குசினை இருந்து,
கிளி கடி மகளிரின் விளி படப் பயிரும் 15
கார்மன் இதுவால் தோழி! ''போர் மிகக்
5
கொடுஞ்சி நெடுந் தேர் பூண்ட, கடும் பரி,
விரிஉளை, நல் மான் கடைஇ
வருதும்'' என்று அவர் தெளித்த போழ்தே.
பருவம் கண்டு ஆற்றாமை மீதூரத், தலைமகள் சொல்லியது.
இடைக்காடனார் பாடல்
கி.மு. காலத்துப் பாடல்
Really useful
ReplyDeleteThanks for your understanding.
DeleteHello sir. The explanation is very easy to understand but in the 3rd point I don't understand the 1st sentence. Can u explain me that sir?
ReplyDeleteஇப்போது புரிகிறதா, பாருங்கள். இன்றேல் மேலும் விளக்குகிறேன்.
Delete