கடல்ஆமை கடற்கரை மணலில் முட்டையிட்டுப் புதைத்துவிடும்.
குஞ்சு பொரியும் காலத்தில் தாய்ஆமையின் கணவன் குஞ்சுகளைப் காப்பாற்றும். இந்த வாழ்க்கைப்
பாங்கைத் தமிழர் அறிந்திருந்தனர்.
திருட்டுத்தனமாக வந்த தலைவன் திருமணம் செய்துகொள்ள
வருவதைத் தோழி தலைவிக்குத் தெரிவிக்கிறாள்.
1
நிலை கொள்ளாத என் நெஞ்சம் துள்ளிக் குதிக்கிறது. சீவி முடித்த சிங்காரியே, உனக்கும் அப்படியா?
2
கோட்டுவட்டு என்பது கோடு போட்டு அதில் குண்டை உருட்டி விளையாடும் ஒரு தமிழர் விளையாட்டு. அண்மைய காலத்தில் இதனைப் “பேந்தா குண்டு” என்று சொல்லிக்கொண்டு விளையாடி வந்தனர்.
ஆமை முட்டையிடும். கோட்டுவட்டு அளவில் முட்டையிடும். உப்பங்கழியில் படர்ந்திருக்கும் அடும்புக் கொடியையும், வெண்மணலையும் சிதைத்து மணலுக்குள் முட்டையிடும். மணலை மூடிவிட்டுச் சென்றுவிடும். அந்த முட்டை புலவு நாற்றம் வீசும். ஆமைக்குஞ்சு (பார்ப்பு) வெளிவரும் காலத்தில் தாய் ஆமையின் கணவன் அங்கு வந்து குஞ்சுகளைப் பாதுகாக்கும். இப்படிப்பட்ட சேர்ப்பு நிலத்தின் (கடல் சேர்ந்திருக்கும் நிலம்) தலைவன் உன் காதலன்.
3
அவன் அப்போதெல்லாம் கள்ளத்தனமாக இரவில் வருவான். குதிரை பூட்டிய தேரில் வருவான். குதிரையை ஓட்ட முள் குத்தியிருக்கும் தார்க்கோலைப் பயன்படுத்த மாட்டான். பயன்படுத்தினால் குதிரை பலர் காதுகளுக்குக் கேட்கும்படிக் குதிரை சிறந்து தாவி ஓடும். அதனைத் தவிர்க்க வாள்நூல் சவுக்கு (வள்பு) பயன்படுத்துவான். அப்போது குதிரை எழில்நடை போட்டுக்கொண்டு வரும்.
4
தேர் உப்பங்கழி நீரில் நீந்துவது போல் செல்லும். தேர்ச்சக்கரம் கழியில் பூத்திருக்கும் நெய்தல் கொடியின் மேல் ஏறும். அப்போது நெய்தல் பூ பாம்பு படம் எடுப்பது போலத் தலையைத் தூக்கும். இப்படி இரவு வேளையில் திருட்டுத்தனமாக வருவான்.
5
இப்போது ஒளிமறைவு இல்லாமல் வருகிறான். பகலில் வருகிறான். கலகலப்பாக ஒலிக்கும் தோழரோடு (இளையர்) வருகிறான். தன் வல்லமை மிக்க வாயால் அலர் தூற்றிய சிற்றூரில் வாழும் மக்கள் காணும்படி வருகிறான். குதிரை சிறந்து பாயும்படி வருகிறான். திருமணம் செய்துகொள்ள வருகிறான்.
அன்று இரவில் வந்தான். இன்று பகலில் வருகிறான்.
அன்று ஆருக்கும் தெரியாமல் வந்தான். இன்று
ஊருக்கெல்லலாம் தெரியும்படி வருகிறான்.
அன்று தனியே வந்தான். இப்போது தோழரோடு வருகிறான்.
அன்று அமைதியாக வந்தான். இப்போது ஆரவாரத்தோடு
வருகிறான்.
அன்று குதிரைநடை சிறக்காமல் இருக்கும்படி
ஓட்டிக்கொண்டு வந்தான். இன்று குதிரைநடை சிறக்கும்படி ஓட்டிக்கொண்டு வருகிறான்.
பாடல் சொல் பிரிப்புப்
பதிவு
திணை, நெய்தல்
1
ஒடுங்கு
ஈர் ஓதி நினக்கும் அற்றோ?
நடுங்கின்று,
அளித்து, என் நிறை இல் நெஞ்சம்.
2
அடும்பு
கொடி சிதைய வாங்கி, கொடுங் கழிக்
குப்பை
வெண் மணற் பக்கம் சேர்த்தி,
நிறைச்
சூல் யாமை மறைத்து ஈன்று, புதைத்த 5
கோட்டு
வட்டு உருவின் புலவு நாறு முட்டை
பார்ப்பு
இடன் ஆகும் அளவை, பகுவாய்க்
கணவன்
ஓம்பும் கானல்அம் சேர்ப்பன்:
3
முள்
உறின் சிறத்தல் அஞ்சி, மெல்ல
வாவு
உடைமையின் வள்பின் காட்டி, 10
ஏத்
தொழில் நவின்ற எழில் நடைப் புரவி
4
செழு
நீர்த் தண் கழி நீந்தலின், ஆழி
நுதிமுகம்
குறைந்த பொதி முகிழ் நெய்தல்,
பாம்பு
உயர் தலையின், சாம்புவன நிவப்ப,
இர
வந்தன்றால் திண் தேர்; கரவாது 15
5
ஒல்லென
ஒலிக்கும் இளையரொடு வல் வாய்
அரவச்
சீறூர் காண,
பகல்
வந்தன்றால், பாய்பரி சிறந்தே.
தோழி வரைவு மலிந்து சொல்லியது.
குமுழி ஞாழலார் நப்பசலையார் பாடல்
குமுழிஞாழல் என்னும் ஊரில் வாழந்த நப்பசலையார்.
கி.மு. காலத்துப் பாடல்
No comments:
Post a Comment