Pages

Saturday, 16 July 2016

மறைசை அந்தாதி MaraisaiAntati

மறைசை அந்தாதி என்னும் நூல் யாழ்ப்பாணத்து நல்லூர் சின்னத்தம்பிப்புலவர் இயற்றிய நூலாகும். 

இதில் காப்புச் செய்யுள் நீங்கலாக நூறு பாடல்கள் உள்ளன. 

வேதாரணியம் என்னும் திருமறைக்காடு மறைசை என்னும் மரூஉ மொழியால் குறிப்பிடப்படுகிறது. 

இவ்வூரில் குடிகொண்டுள்ள சிவபெருமான் புகழை இந்த நூல் பாடுகிறது. 

பாடல்கள் கட்டளைக் கலித்துறை என்னும் யாப்பமைதியால் ஆனவை. 

ஏற்றம் மிகு செந்தமிழ் நடையில் இந்த நூல் இசையோட்டம் கொண்டு திகழ்கிறது.


















No comments:

Post a Comment