Pages

Saturday, 4 June 2016

நற்றிணை Natrinai 116

அவன் நட்பு மரத்திலிருந்து மலைச்சரிவில் விழுந்து உருண்டோடித் தொலைவில் கிடக்கும் பலாப்பழம் போன்றது என்கிறாள் காதலி.

1

ஒருவரிடம் தீமை கண்டாலும் அதனை ஆராய்ந்த பின்னர்தான் முடிவுக்கு வரவேண்டும் என்று பெரியோர் கூறுவர்.

2

எவ்வளவுதான் சோற்றுப் பிண்டம் ஊட்டினாலும் சூலுற்றிருக்கும் பெண்யானை இரண்டு மூங்கில்களுக்கு இடையே கொழுத்து வளரும் மூங்கில் முளையை மேயவே விரும்பும். 

இப்படி யானை விரும்பும் மலையை உடையவன் என் நாடன். 

அவன் நட்பு எப்படிப்பட்டது தெரியுமா?

மூங்கில் முளை - தலைவன் 

3

கிளையில் இருந்த பலாப் பழம் மலை வெடிப்பில் விழுந்து கிடப்பது போன்றது அவன் நட்பு.

மரம் – பெற்றோர், வெடிப்பு – காதலன்

4

பலாப் பழம் மலைப் பிளவில் உருண்டு சென்று தொலைவிடத்தில் கிடப்பது போன்றதும் ஆகும். 

பெரிய கற்கள் அடுக்கி வைத்த இருண்ட குகையில் வாழும் பெண்டிர் இன்னும் வாய் ஓயாமல் அலர் தூற்றுகின்றனர்.


(சொல் பிரிப்புப் பதிவு)
பாடல் – குறிஞ்சி

1

தீமை கண்டோர் திறத்தும் பெரியோர் 
தாம் அறிந்து உணர்க என்ப மாதோ 


2

வழுவப் பிண்டம் நாப்பண் ஏமுற்று 
இரு வெதிர் ஈன்ற வேல் தலைக் கொழு முளை 
சூல் முதிர் மடப் பிடி நாள் மேயல் ஆரும் 
மலை கெழு நாடன் கேண்மை பலவின் 


3

மாச் சினை துறந்த கோள் முதிர் பெரும் பழம் 
விடர் அளை வீழ்ந்து உக்காஅங்கு தொடர்பு அறச் 


4

சேணும் சென்று உக்கன்றே அறியாது 
கல் அடுக்கத்து இருள் முகை இருந்த 
குறிஞ்சி நல் ஊர்ப் பெண்டிர் 
இன்னும் ஓவார் என் திறத்து அலரே

வரைவு நீட்டிப்ப ஆற்றாளாய தலைவி தோழிக்கு வன்புறை எதிரழிந்து சொல்லியது
கந்தரத்தனார் பாடல்

கி.மு. 2 ஆம் நூற்றாண்டுக்கு முந்தைய பாடல்

 கல் அடுக்கம்

 கல் அடுக்கத்து 
இருள் முகை

No comments:

Post a Comment