இரைக்கும் வாடை
தலைவி தன் தோழியிடம் தன் கலக்கத்துக்குப்
புது விளக்கம் தருகிறாள்.
“நாம் ஒன்று சேர்வோம்”
என்று அவர் சொன்னார்.
அது பழமையான நட்பு.
இந்த நட்புறவுடன் காதலர் சென்றுள்ளார்.
அதனால் கலக்கமுற்றுப் பித்தாகி, நெற்றி-நிறம் மாறிய நிலையில் இருக்கிறாயா, என்று
கேட்கிறாய்.
அணிகலன்கள்
புனைந்துகொண்டு, எனக்கும் புனைந்துவிடும் நல்லவளே, சொல்கிறேன் கேள்.
சொல்லமுடியாத அளவுக்கு
வாடைக்காற்று-தான் என் துன்பத்தை ‘இம்’ என்று வாரி இரைக்கிறது (தூற்றுகிறது).
இருளில், வாடைக்காற்று
வீசும் நீர்த்துளியில், தலையில் கூழைக் கயிற்றால் கட்டிப்
பிணிக்கப்பட்டிருக்கும் பசு வருந்துவது போல நான் வருந்திக்கொண்டிருக்கிறேன்.
அவ்வளவுதான்.
பகல் மடிந்த பொழுதில் தனியே இருக்கிறேனே! என்ன செய்வேன்.
(சொல் பிரிப்புப் பதிவு)
பாடல் 109 பாலை
ஒன்றுதும் என்ற தொன்று படு நட்பின்
காதலர் அகன்றெனக் கலங்கிப் பேதுற்று
அன்னவோ இந் நன்னுதல் நிலை என
வினவல் ஆனாப் புனையிழை கேள் இனி
உரைக்கல் ஆகா எவ்வம் இம்மென
இரைக்கும் வாடை இருள் கூர் பொழுதில்
துளியுடைத் தொழுவின் துணிதல் அற்றத்து
உச்சிக் கட்டிய கூழை ஆவின்
நிலை என ஒருவேன் ஆகி
உலமர கழியும் இப் பகல் மடி பொழுதே
காதலர் அகன்றெனக் கலங்கிப் பேதுற்று
அன்னவோ இந் நன்னுதல் நிலை என
வினவல் ஆனாப் புனையிழை கேள் இனி
உரைக்கல் ஆகா எவ்வம் இம்மென
இரைக்கும் வாடை இருள் கூர் பொழுதில்
துளியுடைத் தொழுவின் துணிதல் அற்றத்து
உச்சிக் கட்டிய கூழை ஆவின்
நிலை என ஒருவேன் ஆகி
உலமர கழியும் இப் பகல் மடி பொழுதே
பிரிவிடை ஆற்றாளாய தலைமகளது நிலைகண்ட தோழிக்குத்
தலைமகள் சொல்லியது
மீளிப் பெரும்பதுமனார் பாடல்
கி.மு. 2 ஆம் நூற்றாண்டுக்கு முந்தைய பாடல்
Sir your notes very useful ah irukku sir.... thank you so much sir
ReplyDeleteஉழைப்புக்குத் தரும் ஊக்கம்
Delete