ஊழ் என்றால் என்ன? இலக்கியலகள் இந்தச் சொல்லை
எவ்வாறு கையாளுகின்றன?
முறை
- முலை ஞெமுங்க பல் ஊழ் அடைதல் (அகம் 58)
- விசும்பில் ஊழி ஊழ் ஊழ் செல்ல (பரிபாடல் 2)
- தழலும் தட்டையும் குளிரும் … ஊழ் ஊழ் வாங்கி, முழக்கல் (குறிஞ்சிப்பாட்டு 44)
முறையாக வருவது
- ஊழின் பெருவலி யா உள | ஆகு ஊழ் | போகு ஊழ் | (திருக்குறள்)
பூத்தல்
- இணர் ஊழ்த்தும் நாறா மலர் – திருக்குறள்
- மௌவல் முகை ஊழ்ப்ப (கலித்தொகை 27-4)
- மௌவல் ஊழ்முகை அவிழ (நற்றிணை 115-6)
- பாதிரி ஊழ் குகை அவிழ (புறம் 399)
- ஊழ் இணர் நறவம் (பரிபாடல் 19-78)
விளைதல்
- இறுகு ஊழ் உற்று அலமரும் (மலைபடுகடாம் அடி 133)
உதிரல்
- ஊழ் மலர் (மலைபடுகடாம் அடி 130)
வழுக்கும் பகுதி
- ஊழ் அடி முட்டம் (குறிஞ்சிப்பாட்டு அடி 258)
எல்லை
- கானம் ஊழ் இறந்து மான் ஓடும் (மலைபடுகடாம் அடி 405)
தன்னை அறியாமல் கால் செல்லல்
- ஊழ் இழிபு (மலைபடுகடாம் அடி 288) ஊழ் இறந்து மலைபடுகடாம் அடி 253)
இயல்பு
- குயில் ஊழ் கொள்பு கூவ (மலைபடுகடாம் அடி 8)
![]() |
இந்தப் பூக்களின் நிறமும் உருவும் ஊழ் |
No comments:
Post a Comment