கல் மேல் எழுத்து
நீர் மேல் எழுத்து
நல்லா ரொருவர்க்குச் செய்தஉபகாரம்
கல்மே லெழுத்துப்போற் காணுமே-அல்லாத
ஈரமிலா நெஞ்சத்தார்க் கீந்தஉபகாரம்
நீர்மே லெழுத்திற்கு நேர். (2)
நெஞ்சில் ஈரம் உள்ள நல்லவர்க்கு உதவி செய்தால் அது அவர்களின் நெஞ்சில் கல்லில் பொளித்து எழுதிய எழுத்துப் போல அழியாமல் நிலைத்திருக்கும். நெஞ்சில் ஈரமில்லாதவர்களுக்கு உதவினால் அவர்கள் அதனைத் தண்ணீரில் எழுதும் எழுத்து எழுதும்போதே மறைந்துவிடுவது போல அப்போதே மறந்துவிடுவார்கள்.
![]() |
| கல்மேல் எழுத்து |
12 ஆம் நூற்றாண்டு ஔவையார் பாடிய மூதுரை (வாக்குண்டாம்)

No comments:
Post a Comment