Pages

Tuesday, 9 September 2014

காதல் பாடல் குறுந்தொகை # 354

354. மருதம்

நீர் நீடு ஆடின் கண்ணும் சிவக்கும்;
ஆர்ந்தோர் வாயில் தேனும் புளிக்கும்;
தணந்தனை ஆயின், எம் இல் உய்த்துக் கொடுமோ
அம் தண் பொய்கை எந்தை எம் ஊர்க்
கடும் பாம்பு வழங்கும் தெருவில்
நடுங்கு அஞர் எவ்வம் களைந்த எம்மே?


பரத்தையிற் பிரிந்து வாயில் வேண்டிச் சென்ற தலைமகற்குத் தோழி வாயில் மறுத்தது.

கயத்தூர் கிழான்

நீண்டநேரம் நீராடினால் கருத்த கண்-கூடச் சிவக்கும்.
மிகுதியாக உண்டால் இனிக்கும் தேன்-கூடப் புளிக்கும்.  
நீண்ட நாள் பிரிந்து வாழ்ந்தால் எம் வீடு மட்டும் இடம் தருமா?
பொய்கை சூழ்ந்த எம் தந்தை ஊரில் கடுமையான பாம்பு நடமாடும் தெருவில் காமத்தால் நடுங்கும் உன் துன்பம் போக்கிய என் தலைவியும் அப்படித்தான் ஆகிவிட்டாள். .
  
கி.மு. 2ஆம் நூற்றாண்டு

No comments:

Post a Comment