- உலக வாழ்க்கையின் நிலை இல்லாத தன்மையை எடுத்துரைப்பது பெருங் காஞ்சி எனப்படும்.
- இதனைச் சொல்லும் மேற்கோள் பாடல்:
ஆயா அறிவு அயர்ந்து அல்லாந்து அகல் இடத்து
மாயா நிதியம் மனைச் செறீஇ - ஈயாது
இறுகப் பொதியன்மின் இன்றோடு நாளைக்
குறுக வரும் அரோ கூற்று.
- ஆராயாமல்
- அறிவு மயங்கி
- பயன்படுத்தாமல் இடமெல்லாம் மல்லாந்து கிடக்கும் செல்வத்தைப் பிறருக்குத் தராமல் வீட்டில் பதுக்கி வைத்திருக்காதீர்.
- இன்றோ நாளையோ உன் உயிரைக் கொண்டு செல்லக் கூற்றுவன் வருவான்.
பொதுவியல் - பொது இயல்
புறப்பொருள் வெண்பா மாலை PDF பக்கம் 154
பாடல் - சொல் பிரிப்பு
புதிய புதிய சொற்றொடர்
No comments:
Post a Comment