வீரர்கள் செய்யும் தொழிலைக் கூறுவதும்
"கொற்றவை நிலை"
என்னும் புறப்பொருள் துறை ஆகும்.
இதனைச் சொல்லும் பாடல்:
தமருள் தலையாத தார் தாங்கி நிற்றல்
எமருள் யாம் இன்னம் என்று எண்ணல் - அமரின்
முடு கழலின் முந்துறுதல் முல்லைத் தார் வேந்தன்
தொடு கழல் மைந்தர் தொழில்.
- தம்மவருள்ளே தலைமை பெறுதல்
- தூசிப் படையைத் தடுத்து நிறுத்துதல்
- எம் படையினருள் யான் இன்ன நிலையினன் என்று விளங்கும்படிப் போர் புரிதல்
- போரில் முந்திக்கொண்டு செல்லல்
- ஆகியவை
- வேந்தனின் படைமறவர் தொழில்
No comments:
Post a Comment