Pages

Friday, 23 May 2025

பொது நீங்கு உவமை

உவமை கூற எதுவும் இல்லை 
என்று கூறுதல் 
பொது நீங்கு உவமை

திரு மருவு தண் மதிக்கும் செந்தாமரையின் 
விரை மலர்க்கும் மேலாம் தகையால் - கருநெடுங்கண்
மானே! இருள் அளகம் சூழ்ந்த நின் வாள் முகம்
தானே உவமை தனக்கு
  • கருநெடுங்கண் மானே!
  • இருண்ட கூந்தல் சூழ்ந்திக்கும் உன் முகம் 
  • அழகிய குளுமையான மதிக்கும்
  • மணக்கும் செந்தாமரைக்கும்
  • மேலானது ஆகையால்
  • அந்த முகத்துக்கு அந்த முகமே உவமை
மேற்கோள் வெண்பா பதிவு - சொல் பிரிப்பு

No comments:

Post a Comment