'என்னேய் சிலமடவார் எய்தற்கு எளியவோ
பொன்னே அனபாயன் பொன்னெடுந்தோள் - முன்னே
தனவேயென் றாளுஞ் சயமடந்தை தோளாம்
புனவேய் மிடைந்த பொருப்பு '
- வெற்றிச் செல்விக்குக் காட்டு மூங்கில் போன்ற தோள்களில் மலை போல் இரண்டு முலைகள்.
- சோழன் தோள் பொன் போன்றது
- அதனை அவள் தனது செல்வம் என்று ஆள்கிறாள்
- என்னைப் போன்ற சாதாரண சில பெண்கள் அதனை அடைய முடியுமா
- தனித்து ஒளிறும் முத்தைப் போல இந்தப் பாடலில் கருத்து முற்றுப்பெற்றிருப்பதால் இது முத்தகச் செய்யுள்.
முத்தகச் செய்யுள், குளகச் செய்யுள், தொகைநிலைச் செய்யுள், தொடர்நிலைச் செய்யுள் என்று செய்யுன் 4 வகை
மேற்கோள் வெண்பா பதிவு - சொல் பிரிப்பு
No comments:
Post a Comment