Pages

Thursday, 28 May 2026

புலந்திரன் களவு மாலை Pulanditran Kalavu Malai 60

பக்கம் 52

  • தன் முன் இருப்பவன் தனக்குத் தன் குழந்தைப் பருவத்தில் தாலி கட்டிய கணவன் புலந்திரன்தான் எனத் தொரிந்துகொண்டாள். 

கூடல்

"அஞ்சி நடுநடுங்கி அத்தைமகன் என்று அறிந்து 
"ஆறு தப்பு நூறு பிழை அடியாள் நான் செய்ததெல்லாம்
"கோடி தப்பு நூறு பிழை கொற்றவரே கொண்டு அணையும்
"என்று அடி பணிந்தாள்"

அவன் கதவைத் தாளிட்டான்.
சன்னல்களை மூடினான்.

இந்தக் கட்டிலும் மெத்தையும் மாமனார் போட்டது என்று என்று விலக்கிவிட்டு வேறு பூமெத்தையில் அவளைக் குந்தவைத்து அணைத்தான். 

மாதம் ஒருமுறை அவள் முழுகாமல் இருக்கும் நிலையை மாற்றினான் 

மகிழ்வு

ராமனும் சீதையும்
கந்தனும் வள்ளியும்
சாரையும் சர்ப்பமும்

போலக் கூடி மகிழ்ந்தான் 

உண்ண மறுத்தது

பசிக்குப் பால்பழ உணவு படைத்தாள்
அவன் உண்ண மறுத்தான்
பாண்டியர் நாடு திரும்பிய பின் உண்பேன் - என்றான்

அவள் அழுதாள் 

சகுனி சூழ்ச்சியால் சூதாடித் தோற்றகட்டித்தது
பாஞ்சாலியை அவமானம் செய்தது 
பற்றியெல்லாம் கூறினான். 

நானும்

போக விடை கொடு - என்றான் 

நான் உன்னுடன் வருகிறேன் - என்றாள் 

  • குதிரை இருவரைச் சுமக்காது என்றான் 
  • உன்னைக் களவாடிச் சென்றால் உன்னைத் தேடுவார்கள் - என்றான் 
  • பாண்டவர் நாடி பெற்ற பின்னர் கூட்டிச் செல்வேன் - என்றான்
  • பிறக்கும் குழந்தைக்கு ‘அருச்சுனன்’ என்று பெயர் வை - என்றும் கூறினான்

பிறக்கும் குழந்தை உன் குழந்தை என்பதற்கு அடையாளமாக என்மாமியார் தந்த அடையாளம் என்னிடம் இருக்கிறது - என்றாள். 

வான்புரவி 

குதிரை வந்து நின்றது 
ஏறினான்

அவள் வாடி மனம் தளர்ந்தாள். 

ஆங்கிலேயர் வருகைக்குப் பின்னர், 
18 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த புகழேந்திப் புலவர் 
எளிய நடையில் 
வெண்கலிப்பா யாப்பில் இயற்றிய நூல் 
(பாடல் பகுதிகளுடன் கதை)

No comments:

Post a Comment