தலைவி வாடைக்காற்றோடு பேசிக்கொண்டு புலம்புகிறாள்.
1
வாடைக் காற்றின் தாக்கத்தால் அவரைப்பூ காய்க்காமல் கொட்டுகிறது.பவளம் போன்று துளையுள்ள ஈங்கைப் பூ பூக்கிறது.ஈர நிலத்தில் பகன்றைப் பூ பூக்கிறது.இவை உதிர்கின்றன.மழைநீர் வரவில்லை.நெல் கதிர் வாங்கி, அவல் இடிக்கும் அளவு முற்றியுள்ளது.வாடைக் காற்றே!இவ்வாறான நிலைமையை உண்டாக்கிக்கொண்டு இரக்கம் இல்லாமல் வீசிகிறாய்.
2
நெடுநேரம் வீசுகிறாய்.துணை இல்லாமல் வாழவேண்டிய நிலைமை ஆகிவிட்டதே என்று நான் புலம்பிக்கொண்டிருக்கிறேன்.அது என் வல்லமைக்குள் இல்லை என்று சொல்லிக் காட்டிக்கொண்டு வீசுகிறாய்.அவர் நிலைமை உனக்குத் தெரியாதா?தெரிந்துகொண்டால் நல்லது.
3
இப்படிப் பிதற்றிக்கொண்டு நான் கண்ணீர் விடுகிறேன்.என்னை மட்டும் மேலும் மேலும் துன்புறுத்துகிறாய்.உன்னைச் சொல்லிக் குற்றம் இல்லை.என் பழவினைப் பயனால் துன்புகிறேன்.
பாடல் சொல் பிரிப்புப் பதிவு
திணை, பாலை
1
அவரை ஆய் மலர்
உதிர, துவரின
வாங்கு துளைத் துகிரின்
ஈங்கை பூப்ப,
இறங்கு போது அவிழ்ந்த
ஈர்ம் புதல் பகன்றைக்
கறங்கு நுண் துவலையின்
ஊருழை அணிய,
பெயல் நீர் புது
வரல் தவிர, சினை நேர்பு 5
பீள் விரிந்து இறைஞ்சிய
பிறங்கு கதிர்க் கழனி
நெல் ஒலி பாசவல்
துழைஇ, கல்லெனக்
கடிது வந்து இறுத்த
கண் இல் வாடை!
''நெடிது வந்தனை'' என
நில்லாது ஏங்கிப்
2
பல புலந்து உறையும்
துணை இல் வாழ்க்கை 10
நம்வலத்து அன்மை கூறி, அவர்
நிலை
அறியுநம் ஆயின், நன்றுமன் தில்ல;
3
பனி வார் கண்ணேம்
ஆகி, இனி அது
நமக்கே எவ்வம் ஆகின்று;
அனைத்தால் தோழி! நம் தொல்
வினைப் பயனே! 15
தலைமகன் பிரிவின்கண் வற்புறுத்தும்
தோழிக்குத், தலைமகள் ''ஆற்றேன்'' என்பது படச் சொல்லியது.
கொடியூர் கிழார் மகனார் நெய்தல்
தத்தனார் பாடல்
கி.மு.
காலத்துப் பாடல்

No comments:
Post a Comment