அழிதுளி | பெருமழை
நீயும் நானும் தனியே புலம்பும்படி வாடைக்காற்று
வீசுகிறது. மாலைக் காலமும் வந்துவிட்டது. தோழி! என்ன செய்யலாம்? – தலைவியும் தோழியும்
இவ்வாறு உரையாடிக்கொள்கின்றனர்.
1
கீழைக் காற்று வீசி வானத்தில் செறிந்துகொண்டது
(நின்றுவிட்டது). திரை பிதிர்ந்து பொங்கும் நுரை
போல, வானத்து முகடுகளில் விருப்பத்துடன் ஏறி, சூலுற்ற மழைமேகம் பெருமழை பொழிந்த கடைசி
நாளைத் தாண்டிவிட்டது.
2
பனிப் பருவம் தொடங்கியது. உடலில் மயிர் கொண்டுள்ள
காய் உழுந்து. உழுந்துச் செடியின் இலை உதிரும்படி வாடை வீசுகிறது. அவர் காதலின்பம்
நல்காத காலத்தில் துன்பறுத்திக்கொடு வாடை வீசுகிறது.
3
மிகப் பெரிய யானை கொட்டாவி விடுவது போன்று
வீசுகிறது. அத்துடன் மாலையும் வந்துவிட்டது. இந்த நிலையில் அவர் இல்லாமல் தனிமையில்
இருக்கிறோம் (புலம்பு).
பாடல் (சொல் பிரிப்புப் பதிவு) 89. முல்லை
1
கொண்டல்
ஆற்றி விண்தலைச் செறீஇயர்,
திரைப்
பிதிர் கடுப்ப முகடு உகந்து ஏறி,
நிரைத்து
நிறை கொண்ட கமஞ் சூல் மா மழை
அழி
துளி கழிப்பிய வழி பெயற் கடை நாள்,
2
இரும்
பனிப் பருவத்த மயிர்க் காய் உழுந்தின் 5
அகல்
இலை அகல வீசி, அகலாது
அல்கலும்
அலைக்கும் நல்கா வாடை,
3
பரும
யானை அயா உயிர்த்தாஅங்கு,
இன்னும்
வருமே தோழி! வாரா
வன்கணாளரோடு
இயைந்த 10
புன்கண்
மாலையும் புலம்பும் முந்துறுத்தே!
''பொருள் முற்றி மறுத்தந்தான்'' எனக் கேட்ட
தோழி தலைவிக்கு உரைத்தது.
இளம் புல்லூர்க் காவிதி பாடல்
கி.மு. 2 ஆம் நூற்றாண்டுக்கு முந்தைய பாடல்
No comments:
Post a Comment