Pages

Sunday, 29 November 2015

அகநானூறு Agananuru 43

ஏதில் பொருள்பிணி 
பொருள்-நோய் 
பொருளைப் பிணித்துக் கொண்டுவரல்


பொருள் தேடச் செல்ல எண்ணியவன் மேலும் எண்ணிப் பார்க்கிறான்.

கடல்நீரை மொண்டு கருவுற்ற நிலையில் செல்லும் மழைமேகம் மின்னலுடன் சுழன்று, இடியுடன் முழங்குகிறது. வெயிலால் துன்பப்பட்ட பெண்யானை தன் ஆண்யானையுடன் கையும் மூழ்கும்படிப் பாயும் வெள்ளத்தில் குளிக்கிறது. மண்ணிலிருந்து வானம் வரை நீரே தெரிந்தது. மழை அளக்கும் கிண்ணத்தில் (குறுநீர்க் கன்னல்) மழையை அளந்து பார்த்தார்களே தவிர, வெயிலே பாயவில்லை. இப்படி எல்லாரும் அஞ்சும்படி வானம் பேய்மழை பொழிந்தது.   

இந்த நேரத்தில் நான் எப்படி இருக்கவேண்டும்? அவள் முல்லைப் பூவைக் காம்போடு கொய்து நெற்றிக்கு மேலே இருண்டு கிடக்கும் கூந்தலில் சூடிக்கொண்டிருக்கிறாள். அது காடெல்லாம் மணக்கிறது. அவள் மென்மையானவள். அவளது நல்லழகு கொண்ட மார்போடு மார்பாகச் சேர்ந்து கிடக்க வேண்டும். அப்படி இல்லாமல் பொருள் தேடுவதற்காகத் துணையைப் பிரிந்து, அவள் தரும் இன்பக் கொடை இல்லாமல், தனிப் படுக்கையில் இரக்கப்பட வேண்டிய நிலையில் கிடக்க எந்த மடையன் விரும்புவான்?


திணை - பாலை
சொல் பிரிப்புப் பதிவு

கடல் முகந்து கொண்ட கமஞ் சூல் மா மழை
சுடர் நிமிர் மின்னொடு வலன் ஏர்பு, இரங்கி,
என்றூழ் உழந்த புன் தலை மடப் பிடி
கை மாய் நீத்தம் களிற்றொடு படீஇய,
நிலனும் விசும்பும் நீர் இயைந்து ஒன்றி,          5
குறுநீர்க் கன்னல் எண்ணுநர் அல்லது
கதிர் மருங்கு அறியாது, அஞ்சுவரப் பாஅய்,
தளி மயங்கின்றே தண் குரல் எழிலி; யாமே
கொய் அகை முல்லை காலொடு மயங்கி,
மை இருங் கானம் நாறும் நறு நுதல்,  10
பல் இருங் கூந்தல், மெல் இயல் மடந்தை
நல் எழில் ஆகம் சேர்ந்தனம்; என்றும்
அளியரோ அளியர் தாமே அளி இன்று
ஏதில் பொருட்பிணிப் போகி, தம்
இன் துணைப் பிரியும் மடமையோரே!              15

தலைமகன்பொருள் கடைக்கூட்டிய நெஞ்சிற்குச் சொல்லியது.
மதுரையாசிரியர்நல்லந்துவனார் பாடியது

The hero redeems his decision of going away for earning. It is rainy season. The rain is pouring with lightning and thunder. Flood is heavy. Male and female elephants are swimming hand in hand. There is no bright sun light in the sky. Water is pouring from heaven to floor with straight drops. There is rain-gauge to measure rain-fall. Without this gauge, nothing can measure the season. In such a season we might have enjoying, clubbing her breast like tender mattress. She is wearing mullai-flower on her hair that spreads fragrant all over the area. Leaving this opportunity, who will be the idiot, be away in a distant place to be mended? You, my mind! Redeem.         

A poem by: Nallanduvanar, a teacher in Madurai
The text is belongs to second century B.C. or earlier.  

மழையை அளக்கும் கருவிகளில் ஒன்று
இது போன்ற ஒரு மழைமானி (குறுநீர்க் கன்னல்) சங்ககாலத்திலேயே பயன்படுத்தப்பட்டது 

No comments:

Post a Comment