எழுதரு
மதியம் கடல் கண்டாஅங்கு
ஒழுகு
வெள் அருவி ஓங்கு மலைநாடன்
ஞாயிறு
அனையன் தோழி!
நெருஞ்சி
அனைய என் பெரும் பணைத்தோளே.
வரைவிடை, ''வேறுபடுகின்றாய்'' என்ற தோழிக்குக் கிழத்தி
உரைத்தது.
மதுரை வேளாதத்தன் பாடல்
எழும்
நிலவின் ஒளி கடலில் தோன்றுவது போல வெள்ளை அருவி மலையில் தோன்றும் நாடன் அவன். அவனோ
ஞாயிறு போன்றவன். நானோ அவனுக்கு நெருஞ்சி முள் போன்றவள் ஆகிவிட்டேன்.
கி.மு. 2ஆம் நூற்றாண்டு

No comments:
Post a Comment