- செம்முகப் பன்றி ஒன்று தன் நிழலைப் பார்த்து, அதனை பகடு (ஆண்யானை) என்று எண்ணிப் பாய்ந்து குத்த அதன் கொம்பு ஒடிந்துபோயிற்று. அதனைப் பார்த்த குறவர் அந்தப் பன்றியைப் பிடிக்கக் குரல் எழுப்பின்னர். இது ஈங்கோய் மலை. வில்லை வளைத்துக்கொண்டு 3 எயில் எய்ய வெகுண்டவன் மலை.
- பிடியைப் பிரிந்த வேழம் தன் வருத்தத்தில் வானத்தில் மேயும் மேகங்களைப் பார்த்து, தன் பிடி என்று எண்ணி, அதனைத் தன்னுடன் கூட்டிக்கொள்ள, தன் கைகளை மேகத்தின்மேல் நீட்டும் மலை, ஈங்கோய் மலை. அங்குள்ள சிவன் வானவர்க்கு அருள் வழங்கத் தீப்பிழம்பு மேனி கொண்டு நின்றவன்.
- யானையும் யானையும் போரிட்டுக்கொள்ளும். அப்போது முரிந்த தந்த முத்துகளை நீர்முத்து என்று எண்ணிக்கொண்டு, அதனைக் பருமந்தி விழுங்கும். அதனைப் பார்த்து, குறவர் சிரிப்பர். இப்படிப்பட்டது ஈங்கோய் மலை. இது மூவெயில் செற்ற சிவன் இருக்கும் மலை.
- களிற்றின் மருப்பு முத்துகளை உகுக்கும். குறவரின் சிறுவர்கள் தம் கைகளில் அள்ளிக்கொள்வர். குடை போல் வளைத்த கைகளில் அள்ளிக்கொள்வர். நறவக் கள்ளை இளவெயிலில் சூடாகும்படிக் காய்ச்சிப் பருகுவர். இது ஈங்கோய் மலை. மூவெயிலில் தீ இட்ட சிவன் இருக்கும் மலை.
- குறவன் மானை வேட்டையாடிக் கொண்டுவந்து அதனோடு விளையாடும்படி மனைவியிடம் கொடுத்தான். அவள் அவன்மீது சீறினாள். ‘கலைமான் பிரிந்து வருந்தும்படி விட்டுவிட்டு பெண்மானை ஏன் பிடித்து வந்தாய்’ என்று சொல்லிக்கொண்டு சீறினாள்.
ஈங்கோய் எழுபது என்னும் நூல் 10 ஆம் நூற்றாண்டு நக்கீரதேவ நாயனார் ஈங்கோய் மலை ஈசனைப் போற்றும் 70 வெண்பாக்கள் கொண்டது.
View comments