ஒட்டக்கூத்தர் நெய்த்தானத்துச் சிவன்மீது பாடிய பாடல்
விக்கா வுக்கா வித்தா விப்போய் விட்டான் நட்டார் கட்டூர் புக்கார்
இக்கா யத்தா சைப்பா டுற்றே இற்றோடிப்போய் வைப்பீர் நிற்பீர்
அக்கா டப்பேய் தொக்கா டச்சூ ழப்பா டத்தீ வெப்பா டப்பூண்
நெக்கா டக்கா னத்தா டப்போம் நெய்த்தா னத்தா னைச்சே வித்தே
விக்கா உக்கு ஆவித் தாவிப் போய்விட்டான்
நட்டார் கட்டூர் புக்கார்
இக் காயத்து ஆசைப்பாடு உற்றே இற்று ஓடிப்போய் வைப்பீர்
நிற்பீர்
அக் காடு அப் பேய் தொக்கு ஆடச்
சூழ் அப்பு ஆடத்
தீ வெப்பு ஆடப்
பூண் நெக்கு ஆடக்
கானத்து ஆடப்
போம்
நெய்த்தானத்தானைச் சேவித்தே
விக்கல் வந்தது
ஆவி மூச்சு உதிர்ந்தது
ஆவி மூச்சு தாவிப் போய்விட்டது
அவன் போய்விட்டான்
நெய்த்தானத்தானை நண்பனாக ஆக்கிக்கொண்டவர் அவன் கட்டிய ஊராகிய சிவலோகம் அடைந்தார்
இந்த உடலின்பத்தின் மீது ஆசைப்பட்டு ஓடிப்போய் அதில் நிற்கிறீர்கள்
அவன் காட்டில் அவன் பேய்கள் கூடி ஆடுகின்றன
அவன் தலையில் கங்கை நீர் ஆடுகிறது
கையில் தீ ஆடுகிறது
கழுத்தில் பாம்புப்பூண் ஆடுகிறது
அவன் சுடுகாட்டிலே ஆடுகிறான்
நெய்த்தானத்தானை வழிபாடு செய்துகொண்டு எல்லாரும் செல்வோம்
மு. அருணாசலம், தமிழ் இலக்கிய வரலாறு, 12ஆம் நூற்றாண்டு பாகம் 1, பார்க்கர் அச்சகம் பதிப்பு, 1973, பக்கம் 271
No comments:
Post a Comment