Pages

Sunday, 26 October 2025

ஒட்டக்கூத்தர் செயல்கள்

ஒட்டக்கூத்தர் செயல்களில் சில

புலமை இல்லாக் கவிவாணர்களை மகாநவமி பூசை நாள் வரையில் சிறையில் வைத்திருந்தார். விசயதசமி நாளன்று அவர்களை வரவழைத்து, சில கேள்விகள் கேட்டுச் சரியான விடை சொல்லாதவர்கள் இருவர் தலைக் குடுமிகளை முடிந்து அவர்களின் தலைகளை வெட்டினார்.
  1.  "இரண்டொன்றாத் தலை முடிந்து இரங்கப் போட்டு வெட்டுதற்கோ கவி ஒட்டக்கூத்தன் இல்லை" என வரும் பாடல் தொடரால்  உணரலாம்.  
  2. கம்பராமாயணத்தில் உத்தரகாண்டம் பாடியவர். ஈட்டி எழுபது, ஏர் எழுபது (இதனைக் கம்பர் பாடியது என்பர்) என்னும் நூல்கள் பாடியவர். 
  3. கண்டசுத்தி பாடியவர். 
  4. தனக்குத் தீங்கு நேருமோ என்று என்று அஞ்சவேண்டாம் என்று தன்னைப் பாதுகாத்த இராசராசனைத் தேற்றினான். 
  5. ஒட்டக்கூத்தரின் அருள் உள்ளம்
  6. ஒட்டக்கூத்தரின் முதுமை
  7. கூத்தர் திருமாலைப்  பாடிய பாட்டு
  8. கவிச்சக்கரவர்த்தி
  9. கவிராட்சதன்
  10. நண்பன் சோமனைப் பாடியது
  11. நெய்த்தானத்தான்
  12. "காசுக்குக் கம்பன் - தேசு பெறும் - ஊழுக்குக் கூத்தன்" என்று பழம்பாடல் ஒன்று குறிப்பிடுகிறது. ‘ஊழ்வலி உறுத்து வந்து ஊட்டுவது’ போல ஒட்டக்கூத்தனின் வசையோ, இசையோ பலித்தது போலும்.   
இத்தகைய இவரது சிறப்புகளின் காரணமாக இவரைப் பற்றிய போலியான காழ்ப்புக் கதைகள் தோன்றின எனலாம். 

மு. அருணாசலம், தமிழ் இலக்கிய வரலாறு, 12ஆம் நூற்றாண்டு பாகம் 1, பார்க்கர் அச்சகம் பதிப்பு, 1973, பக்கம் 266


  
 

No comments:

Post a Comment